20 கட்சிகளுக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்!
Wednesday, March 16th, 2016
இனத்துவ மற்றும் வர்க்க அடிப்படையில் செயற்படும் கட்சிகளால் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் ஜூன் 6ம் திகதியன்று உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவுள்ளது..
ஜனாதிபதி சட்டத்தரணி பிரசாந்த லால் டி அல்விஸ் குறித்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
மனுவில் இலங்கை தமிழரசுக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், பொதுபலசேனா, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழர் விடுதலைக் கூட்டணி, நவ சிஹல உறுமய, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் இனத்துவ மற்றும் வர்க்க அடிப்படையில் பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இவ்வாறான 20கட்சிகள் தமது பெயர்களுக்கான நியாயத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கை ஜனநாயகக் கொள்கைகளை நிலை நிறுத்தும் - வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன !
சமவங்களுக்கு வருத்தம் தெவித்து ஈபிடிபியுடன் முதல்வர் மணிவண்ணன் சமரசம் - ஜப்பன் அரசு வழங்கிய நிதியை ம...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தில் தற்காலிக உதவி விரிவுரையாளர் பதவிகளுக்கு விண்ணப்பம் கோரல்!
|
|
|


