மீற்றர் பொருத்தாத முச்சக்கரவண்டிகளுக்கு சட்ட நடவடிக்கை!
Wednesday, July 11th, 2018
அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் மீற்றர் மானி பொருத்தப்படாத முச்சக்கரவண்டிகளுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கையை பொலிஸார் அமுல்படுத்தவுள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது.
விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஆலோசனை வழங்கியுள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர்இ வைத்தியர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.
மீற்றர் மானி பொருத்தப்படாத முச்சக்கரவண்டி சாரதிகள் தொடர்பில் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விதம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளுக்கமைய இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
கலாசார சீர்கேடுகள் அச்சத்தை ஏற்படுத்துகின்றது - ஆயர் தெரிவிப்பு
வடக்கு மாகாண சபையின் பிரதி அவைத் தலைவர் அன்டனி ஜெகநாதன் உயிரிழப்பு!
இலங்கையின் கடன் மறுசீரமைப்பில் பங்கேற்குமாறு வர்த்தக மற்றும் பலதரப்பு கடன் வழங்குநர்களுக்கு சீனா அழை...
|
|
|


