தொடர் மழை – ஜப்பானில் இதுவரை 100 பேர் பலி!
Tuesday, July 10th, 2018
பெய்து வரும் தொடர் மழை மற்றும் வெள்ளம் காரணமாக ஜப்பானில் இதுவரை 100 பேர் உயிரிழந்திருப்பதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா, கியாட்டோ, ஒக்காயாமா, எஹிமே உள்ளிட்ட மாகாணங்களில் கடந்த சில தினங்களாக கடும் மழை பெய்து வருகிறது. மழையினால் தாழ்வான பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த 50 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதுடன், அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது.
Related posts:
அகதிகள் முகாமை மூடக்கோரிய போராட்டத்துக்கு தயாராகும் மக்கள்!
அந்தமான் நிக்கோபார் தீவில் நிலநடுக்கம் !
இந்தோனேசியா - சுலவேசி தீவில் உள்ள தங்கச் சுரங்கத்தில் நிலச்சரிவு - 11 பேர் உயிரிழப்பு!
|
|
|


