உலகச் சந்தையை இலக்குவைத்து மீண்டும் எரிபொருள் விலைச் சூத்திரம்!
Tuesday, July 10th, 2018
பன்னாட்டுச் சந்தையில் ஏற்படும் எரிபொருள் விலை மாற்றத்துக்கமைய இலங்கையிலும் எரிபொருள்களின் விலையைப் பேணுவது தொடர்பான அமைச்சரவைப் பத்திரமொன்றை நிதியமைச்சு விரைவில் அமைச்சரவையில் சமரப்பிக்கவுள்ளது.
கடந்த வியாழனன்று எரிபொருள்களின் விலை அதிகரிக்கப்பட்டது. இருப்பினும் சில மணி நேரத்திலேயே அதிகரிப்பு மீளப் பெறப்பட்டது. இப்படியான நிலைமையைத் தவிர்க்கும் நோக்கிலேயே மேற்படி அமைச்சரவைப் பத்திரம் அமையுமென்று அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகச் சந்தையில் எண்ணெய் விலை மாற்றமடையும்போது உடனுக்குடன் இலங்கை விலையையும் மாற்றுவதன் மூலம் இழப்பு ஏற்படுவதைத் தவிரக்க முடியும் எனக் கருதப்படுகின்றது. அத்துடன் எரிபொருள் சூத்திரத்தை வாராந்தம் மாற்றியமைப்பது தொடர்பில் நிதியமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.
Related posts:
இலங்கையர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!
தனியார் மயப்படுத்தினால் போராட்டம் வெடிக்கும் இலங்கை ரயில்வே ஊழியர் சங்கம் எச்சரிக்கை!
சீனித் தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்ய தேவையான டொலரை பெற்றுக் கொள்ள வசதிகளை ஏற்படுத்துமாறு இறக்குமதி...
|
|
|


