சிரியாவில் ஐ.எஸ் தலைவரின் மகன் பலி?
Friday, July 6th, 2018
சிரியாவில் இடம்பெற்ற மோதலில் ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் பாக்தாதியின் மகன் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த செய்தியை டெலிகிராம் வெளியிட்டுள்ளது.
ஹோம்ஸ் மாகாணத்தில் சிரிய அரசாங்க படைகளும் ரஷ்ய படைகளும் இணைந்து மேற்கொண்ட தாக்குதலிலேயே ஐ.எஸ் அமைப்பின் தலைவரின் மகனான ஹூதைப்பா அல் பாத்ரி கொல்லப்பட்டார்.
அவரின் தலைக்கு 25 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அவர் கொலை செய்யப்பட்டதாகவும், காயமடைந்துள்ளதாகவும் பல சந்தர்ப்பங்களில் செய்தி வெளியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
அதிக பாதுகாப்பு அரண்களை தாண்டி தென் கொரியாவுக்குள் நுழைந்த வட கொரிய படைவீரர்!
கியூப தேசத்தின் தலைவர் காஸ்ட்ரோவுக்கு சிலை வைக்க கியூபாவில் தடை!
ஹெலிகாப்டர் விபத்து - நோர்வேயில் 4 பேர் பலி!
|
|
|


