நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் 2 பேர் கைது!
Thursday, July 5th, 2018
நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் 2 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், இரு படகுகள் காங்கேசன்துறை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்திய இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 2 மீனவர்கள் நெடுந்தீவிற்கு அண்மித்த கடற்படைப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட போதே இன்று 05 அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட 2 மீனவர்களும் காங்கேசன்துறை கடற்படையினர் தடுத்து வைத்திருப்பதுடன், கைதுசெய்யப்பட்ட 2 மீனவர்களையும் யாழ்.மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சிடம் ஒப்படைக்கவுள்ளனர்.
இவர்களை ஊர்காவற்துறை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையினை யாழ்.மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றார்கள்.
Related posts:
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் பாதுகாப்பு நடவடிக்கை அதிகரிப்பு!
நாடாளுமன்றம் பொது இடம் அல்ல - கொரோனா சட்டம் நாடாளுமன்றத்திற்கு பொருந்தாது - சுகாதார அமைச்சர் தெரிவி...
போலி ஆவணங்களை பயன்படுத்தி ருமேனியா செல்ல முற்பட்ட நால்வர் கைது!
|
|
|


