சென்.பற்றிக்சை வீழ்த்தி ஸ்ரீமுருகன் சம்பியன்!
Friday, June 29th, 2018
அகில இலங்கை ரீதியில் இளவாலை சென்.ஹென்றீஸ் கல்லூரியினால் 2 ஆவது வருடமாக ஏற்பாடு செய்யப்பட்ட புட்சால் உதைபந்தாட்டத் தொடர் கடந்த 16 ஆம் திகதி நடைபெற்றது.
இத்தொடரில் 16 வயதுப்பிரிவில் பங்குபற்றிய ஏழாலை ஸ்ரீமுருகன் வித்தியாலய அணியினர் இறுதிப் போட்டியில் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று சம்பியனானது.
ஆட்டநாயகனாக சமீதன் தெரிவு செய்யப்பட்டார். தொடரின் அனைத்துப் போட்டிகளிலும் மிகச் சிறப்பாக செயற்பட்ட ஏழாலை ஸ்ரீமுருகன் வித்தியாலய அணி கிண்ணத்தை வென்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளது.
Related posts:
தொடரை வென்றது தென்னாபிரிக்கா!
ஜெயசூர்யா கிரிக்கெட் வாரியத்துக்கு எழுதிய கடிதம்!
கிரிக்கெட் நிறுவனத்திடம் இராஜினாமாக் கடிதத்தை ஒப்படைத்தார் திலான்!
|
|
|


