சுயநினைவற்ற நிலையில் மீட்கப்பட்ட யுவதி வைத்தியசாலையில் அனுமதி!
Thursday, June 14th, 2018
நுணாவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சுயநினைவற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ் விபத்தில் காயமடைந்த டச்சு வீதி சாவகச்சேரியைச் சேர்ந்த எம். தாளினி (வயது-26) என்ற யுவதியே யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கடந்த திங்கட்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் சாவகச்சேரி நுணாவில் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மேற்படி யுவதி சிறியரக வானொன்றுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானார்.
இதனால் சுயநினைவற்ற நிலையில் காணப்பட்ட இவ் யுவதியை மீட்டு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் அவர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
Related posts:
எரியும் நியூ டயமன்ட் கப்பலை உடனடியாக அப்புறப்படுத்துமாறு அறிவிப்பு!
இலங்கையில் இன்றும் நான்கு கொரோனா மரணங்கள் – மொத்த உயிரிழப்பு 73 ஆக உயர்வு!
வெளிநாட்டு கையிருப்பு 3.6 டொலர் பில்லியன்களாக உயர்ந்துள்ளது - அமைச்சர் மனுஷ நாணாயக்கார தெரிவிப்பு!
|
|
|


