கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்!
Tuesday, June 12th, 2018
தமது கோரிக்கைகளை முன்வைத்து ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் தீர்வு கிடைக்கும் வரை முன்னெடுக்கப்படும் என ஒன்றிணைந்த அஞ்சல் சேவையாளர் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.
இதனை முன்னணியின் தலைவர் தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை 4.00 மணி முதல் இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் இடம்பெறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே அனைத்து அஞ்சல் சேவையாளர்களினதும் விடுமுறை நேற்று முதல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அஞ்சல்மா அதிபர் ரோஹன அபேரத்ன தெரிவித்துள்ளார்.
Related posts:
2017 இல் கனடா 3 இலட்சம் அகதிகளை ஏற்கவுள்ளது!
அச்சுறுத்தும் டெங்குக்கு இணையாக மற்றுமொரு உயிர் கொல்லி நோய்!
பேஸ்புக் நிறுவனம் அதிரடி - 24 மணி நேரத்தில் 15 இலட்சம் வீடியோக்கள் நீக்கம்!
|
|
|


