விடைபெற்றுச்செல்லும்மாவை அண்ணைக்குஅஞ்சலி மரியாதை – அனுதாபச் செய்தியில் டக்ளஸ் தேவானந்தா!

கொள்கை வேறு, கோட்டை வேறாக இருப்பினும்
அரசியல் களத்தில் எம்முடன்
சம காலத்தில் பயணித்தவர்.
தானே தேர்ந்தெடுத்த தனது
அரசியல் வழியில்
இறுதி வரை உறுதியுடன் இருந்தவர்.
ஆரம்ப காலச்சூழலில்
அரச நெருக்கடிகளை
அடுத்தடுத்து சந்தித்தவர்.
இளமைக்காலத்தில் சிறைகளில் அடைபட்டு
இன்னல்களை எதிர்கொண்டவர்.
சக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து
தனது வழிமுறையில்
குரல் எழுப்பியவர்,
ஆளுமையும் அர்ப்பணிப்பும் மிக்க மாவை அண்ணை
பாரம்பரிய தமிழரசு கட்சி உறுப்பினர்களால்
ஆழமாக நேசிக்கப்பட்டவர்.
எல்லோர் கனவுகளும்
வெல்லும் காலம்
பிறக்க உழைப்போம்,..
இழப்பின் துயரில் வதைபடும்
குடும்பத்தவர்கள்,. கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் சகலருக்கும் ஆழ்மன ஆறுதல்.
அஞ்சலி மரியாதையுடன்
டக்ளஸ் தேவானந்தா
செயலாளர் நாயகம்
ஈழ மக்கள் ஜனநாயக்கட்சி
ஈ பி டி பி
Related posts:
நந்திக்கடல் புனரமைப்பு தொடர்பில் எனது கோரிக்கை நிறைவேற்றப்படுவதையிட்டு மனமார்ந்த நன்றிகள்!
மரணித்த உறவுகளுக்கு வேலணை பிரதேச சபையில் அஞ்சலி மரியாதை!
கிளிநொச்சி பிறம்மந்தனாறு கிராமத்தில் சமுர்த்தி உற்பத்தி கிராமதை அங்குரார்ப்பணம் செய்துவைத்தார் அமைச...
|
|