நெருக்கடியானநேரத்திலும் நெருக்கமாக இருந்த தோழர் சந்திரமோகன்!

ஈழவிடுதலைப் போராட்டத்தின் மூத்தபோராளியை ஈழ மக்களும் தோழர்களாகிய நாங்களும் இழந்துவிட்டோம். மிக நெருக்கடியான காலகட்டங்களில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியோடு உண்மையாகவும் உறுதியாகவும், சிறந்த ஆலோசனை வழங்கும் தோழனாகவும் செயற்பட்ட தோழர் சந்திரமோகன் அவர்களின் இழப்பு ஈடுசெய்யமுடியாத பேரிழப்பாகும் என்று செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
இன்று (05.07.2016) காலமான தோழர் சந்திரமோகன் நீண்டநாட்களாக உடல் சுகயீனமுற்று சிகிச்சை பெற்றுவந்தார். நேற்றையதினமும் ( 04.07.2016) வைத்தியசாலைக்குச் சென்று தோழர் சந்திரமோகன் அவர்களுக்குஆறுதல் கூறிவந்ததை செயலாளர் நாயகம் அவர்கள் மிகுந்த வேதனையோடு நினைவுபடுத்தியதுடன் தோழர் சந்திரமோகன் அவர்களின் இழப்புக் குறித்து தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|