கிளிநொச்சி பகுதியில் கோர விபத்து – வைத்தியர் பலி!

யாழ்ப்பாணம் – மன்னார் பிரதான வீதியில் பூநகரி ஜெயபுரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தில் யாழ்.கரவெட்டிப் பகுதியைச் சேர்ந்த மன்னார் வைத்தியசாலையில் கடமைபுரியும் மலேரியா தடைப்பிரிவின் வைத்திய அதிகாரி வைத்தியர் கந்தசாமி அரவிந்தன் (வயது -41) என்பவரே உயிரிழந்ததாக வைத்தியசாலைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னாரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி மகிழுந்தில் பயணித்துக் கொண்டிருந்த வேளையில், வேகக் கட்டுப்பாட்டை இழந்த மகிழுந்து மரம் ஒன்றில் மோதியதில் இந்த அனர்த்தம்ஏற்பட்டுள்ளது.
Related posts:
இன்று இரவு 10 மணிக்கு நேத்திரா தொலைக்கட்சியில் ஒளிபரப்பாகும் வெளிச்சம் நிகழ்ச்சியில் செயலாளர் நாயக...
சார்க் அங்கத்துவ நாடுகளுக்கிடையிலான சுகநலபாதுகாப்பு மாநாடு கொழும்பில்!
கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்த நான்கு அமைச்சர்களைக் கொண்ட குழு - அமைச்சர் டக்ளஸ் தகவல்!
|
|