Home English Tamil
     
   
 
 பல்லாண்டு நிறைவு விழாக்களை காணும் யாழ். பொது அமைப்புக்கள் அதில் பங்குபற்றுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு அழைப்பு விடுத்தனர்.
 10.03.2010 - புதன்கிழமை
 
யாழ்ப்பாணத்தில் சிறப்பாக செயற்பட்டுவரும் சனசமூக நிலையங்கள் பலவும் தமது ஆண்டு விழாக்களின் கொண்டாட்டங்களில் பிரதம விருந்தினராக பங்குபற்றி சிறப்பிக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
இன்று மாலை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் யாழ். பணிமனைக்கு யாழ். குருநகர் கிங்ஸ்கிரீன் சனசமூக நிலைய தலைவர் விஜயகாந்த் மற்றும் செயலாளர் குயின்ரஸ் ஆகியோர் தலைமையில் வருகைதந்த நிர்வாகப் பிரதிநிதிகளும் உறுப்பினர்களும் நாற்பத்தைந்தாவது ஆண்டு நிறைவு விழாவினைக் காணும் தமது அமைப்பின் ஆண்டுவிழாவில் பிரதம விருந்தினராக பங்குபற்றி சிறப்பிக்கும் வண்ணம் கேட்டுக்கொண்டனர். இதேவேளை இன்று மாலை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் யாழ். பணிமனைக்கு வருகை தந்திருந்த அரியாலை கலைமகள் சனசமூக நிலையத்தினரும் தமது நாற்பத்தியேழாவது ஆண்டு நிறைவு விழாக்களில் பிரதம விருந்தினராக பங்குகொள்ளும்படி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களைக் கேட்டுக்கொண்டனர். கலைமகள் சனசமூகநிலைய தலைவர் இ.மதிதரன் செயலாளர் கே.உதயசீலன் ஆகியோர் தலைமையில் வருகை தந்த நிர்வாகப் பிரதிநிதிகளும் உறுப்பினர்களுமே மேற்படி வேண்டுகோளை விடுத்தனர்.
 
மேற்படி வேண்டுகோள்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஏற்றுக்கொண்ட அதேவேளை கடந்த காலங்களில் பொருளாகவும் நிதியுதவியாகவும் பல்வேறு உதவிகளை மேற்கொண்டு தமக்கு நல்கிய அனைத்து உதவிகளுக்கும் சனசமூக நிலைய அங்கத்தவர்கள் தமது நன்றிகளையும் தெரியப்படுத்திக்கொண்டனர். இச்சந்திப்புக்களின்போது யாழ். மாநகர பிரதி முதல்வர் துரைராஜா இளங்கோவும் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.









 
     
 
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax:  94 11 2585255 , 2596741
E-Mail: epdp@sltnet.lk 
© 2008 www. epdpnews.com, All Rights Reserved.