Home English Tamil
     
   
 
 சட்டவிரோத தேர்தல் பிரசாரங்கள் தொடருகின்றன.
 09.03.2010 - செவ்வாய்க்கிழமை 

சட்டவிரோத தேர்தல் பிரசாரங்கள் நாட்டின் பல பாகங்களிலும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் சட்டவிரோத தேர்தல் சுவரொட்டி மற்றும் பதாதைகள் தொடர்பாக தேர்தல்கள் ஆணையாளருக்கு தாம் தெளிவுப்படுத்தியுள்ளதாக பவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ரோஹன ஹெட்டி ஆராய்ச்சி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் நாட்டில் எந்த பகுதியிலும் இதுவரை சட்டவிரோத சுவரொட்டிகள் அகற்றப்படவில்லையென கபே அமைப்பின் இணைப்பாளர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார். இதேவேளை கொழும்பில் பல பகுதிகளிலும் சட்டவிரோத பதாதைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் வன்முறைகளை கண்காணிக்கும் மத்தியநிலையத்தின் தேசிய இணைப்பாளர் டீ எம் திசாநாயக்கவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


 
     
 
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax:  94 11 2585255 , 2596741
E-Mail: epdp@sltnet.lk 
© 2008 www. epdpnews.com, All Rights Reserved.