 |
|
| |
|
|
| |
|
|
| |
| | | வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு சென்றோர் நாடு திரும்பியவர்கள் தொடர்பான விபரங்கள் பணியகத்தால் ஆரம்பம் |
| | | 08.02.2010 - திங்கட்கிழமை
வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்காக சென்று நாடு திரும்பியவர்கள் தொடர்பான ஆய்வொன்றினை இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் ஆரம்பித்திருப்பதாக அதன் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான தகவல்கள் விமான நிலையத்தினூடாக பெற்றுக் கொள்ளப்படுவதுடன் தகவல்களை பெறுவதற்காக பரவலான விளம்பரங்கள் மேற்கொள்ளப்படவிருப்பதாகவும் அவர் கூறினார். வெளிநாடுகளுக்குச் சென்று உழைப்பவர்கள் பலர் சொந்த நாட்டுக்கு திரும்பியதும் குறித்த இலக்கின்றி தமது பணத்தை வீண்விரயம் செய்கின்றனர். இதனால் அவர்கள் உழைக்கும் பணத்தை சிறப்பான முறையில் எப்படி முகாமைத்துவம் செய்யலாம் எந்தத்துறைகளில் அதனை முதலீடு செய்வதன் மூலம் அதனை பல மடங்கு பெருக்கலாம் போன்ற ஆலோசனைகள் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளன.
நாடு திரும்பியவர்கள் மீண்டும் வெளிநாட்டுக்குச் செல்ல விரும்பினால் அவர்கள் எவ்வாறான வழிமுறைகளை பின்பற்ற வேண்டுமென்பது குறித்த அறிவுரைகளும் இதன் மூலம் எடுத்துரைக்கப்படவுள்ளன. எனவே வெளிநாடு சென்று திரும்பியவர்களுக்கு இந்த ஆய்வு பேருதவியாக இருக்குமென எதிர்பார்க்கப்படுவதாகவும் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க மேலும் தெரிவித்துள்ளார். |
|
|
|
| |
|
|
|
|
|
|
|
|
|
|
Related Sites: Anandasangaree, Asiantribune, Athirady, Colombopage, Eeelanaasam, Engaltheaasam, Ilakku, PresidentSL, Thayagam, Theerppu, Thenee, Tirradio, Telonews |
| |
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax: 94 11 2585255 , 2596741 |
E-Mail: epdp@sltnet.lk
© 2008 www. epdpnews.com, All Rights Reserved. |
|
|
|
|
|
 |