Home English Tamil
     
   
 
 யாழ். கோட்டையை புனரமைக்க அமைச்சரவை அங்கீகாரம்.
 08.02.2010 - திங்கட்கிழமை
 
சுமார் 300 வருடங்கள் பழைமை வாய்ந்த யாழ். ஒல்லாந்தர் கோட்டையை நெதர்லாந்து அரசின் உதவியுடன் புனரமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஒல்லாந்தர் கோட்டையைப் புனரமைப்பதற்கான பிரேரணையை கலாசார மற்றும் தேசிய உரிமைகள் அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவிக்ரம அமைச்சரவையில் முன்வைத்திருந்தார். புனரமைப்பின் முதற்கட்டம் நெதர்லாந்து அரசு வழங்கும் 62.1 மில்லியன் ரூபா செலவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இத்திட்டத்தினை பூரணப்படுத்த மேலும் 42.4 மில்லியன் ரூபா தேவைப்படும் எனவும் தேசிய நிதியத்திலிருந்து இந்நிதி பெறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பழமைவாய்ந்ததும் பிரசித்தி பெற்றதுமான யாழ். கோட்டையின் அருமை தெரியாத பிரபாகரன் புலிக்கும்பல் அதனை ஆக்கிரித்திருந்த வேளையில் பெரும்பகுதியை இடித்து சீரழித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


 
     
 
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax:  94 11 2585255 , 2596741
E-Mail: epdp@sltnet.lk 
© 2008 www. epdpnews.com, All Rights Reserved.