Home English Tamil
     
   
 
 திருமலையில் விறகு வெட்டச் சென்றவர்கள் புலிகளால் சுட்டுக் கொலை
 

21.08.2008 - வியாழன்

திருகோணமலையில் விறகு வெட்டச் சென்றவர்கள் மீது புலிகள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இரண்டு சிவிலியன்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் திருமலை, வில்கம்வெஹர காட்டுப் பகுதில் நேற்று புதன்கிழமை பிற்பகல் 4.30 மணியளவில் இத்துப்பாக்கிச் சூட்டை நடாத்தியுள்ளனர். இதில் இருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தையடுத்து பொலிசாரும் இராணுவத்தினரும் அப்பகுதிக்கு விரைந்து கூட்டாக தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். காட்டில் விறகு வெட்டுவதற்காகச் சென்ற 13 சிவிலியன்கள் மீது இந்தத்; துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டுள்ளதாகவும் உதிரியாக, அந்தப்பிரதேசத்தில் நடமாடித் திரியும் புலிகள் இத்துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 



 
     
 
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax:  94 11 2585255 , 2596741
E-Mail: epdp@sltnet.lk 
© 2008 www. epdpnews.com, All Rights Reserved.