Home English Tamil
     
   
 
 யாழ்ப்பாணத்தில் மக்கள் மத்தியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா! துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானார் என  வெளிநாடுகளில் விசமத்தனமான பரப்புரை...
 

25.01.2009 - ஞாயிற்றுக்கிழமை

வெளிநாடுகளில் உள்ள சில தீய சக்திகள் இன்று அதிகாலை முதல்கொண்டு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விசமத்தனமான பிரச்சாரம் ஒன்றை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். இதனால் பீதியடைந்த புலம்பெயர் நாடுகளிலும் உள்நாட்டிலும் வாழும் ஆதரவாளர்கள் நண்பர்கள் என பல நூற்றுக் கணக்காணவர்கள் தொலைபேசி வாயிலாகவும், நேரிலும் உண்மை நிலைய அறிந்து கொள்ள ஆர்வம் காட்டினர். இதேவேளை யாழ்ப்பாணத்திலுள்ள அமைச்சரின் அலுவலகத்தில் மக்கள் நேரடியாக வந்து அவரைப் பார்த்து கைலாகு கொடுத்து அமைச்சரைப் பார்த்து உண்மை நிலையை அறிந்து மகிழ்ச்சி அடைந்தனர்.

இதேவேளை வெளிநாடுகளிலும் உள்நாட்டிலும் உண்மை நிலையை அறிந்து கொள்ள தொலைபேசி வாயிலாகவும், நேரடியாகவும் தொடர்பு கொண்ட அனைவரின் ஆதரவிற்கும் நேச உணர்விற்கும் நாம் எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதோடு இவ்வாறு பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கின்றோம்._C

















 
     
 
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax:  94 11 2585255 , 2596741
E-Mail: epdp@sltnet.lk 
© 2008 www. epdpnews.com, All Rights Reserved.