Home English Tamil
     
   
 
 வன்னிக்கு அத்தியாவசியப் பொருட்கள்  தட்டுப்பாடின்றி கிடைக்க அரசு நடவடிக்கை   
 

வன்னிப் பகுதி மக்களுக்குத் தேவையான அத்தியவசியப் பொருட்களை தட்டுப்பாடின்றி அனுப்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாகவும் எந்த சூழ்நிலையிலும் அப்பகுதி மக்களுக்கு உணவுப் பற்றாக்குறை ஏற்படாத வகையில் செயற்பட தயாராக இருப்பதாகவும் அத்தியவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் திவாரத்ன தெரிவித்தார்.

மோதல் காரணமாக இடம்பெயரும் வன்னி மக்களுக்காக அரசாங்கம் முன்னெடுத்து வரும் மனித நேய நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு மனித உரிமைகள் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சில் இன்று பிற்பகல் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

வன்னிப் பிரதேச மக்களும் இந்நாட்டுப் பிரசைகளே. அரசு எனும் வகையில் அவர்களுக்குத் தேவையான அடிப்படை உதவிகளை வழங்க எமது திணைக்களம் தயாராகவுள்ளது. விடுவிக்கப்படாத பகுதியிலுள்ள மக்களுக்கும் முடியுமான அளவு உதவிகளை அனுப்பி வருகின்றோம். எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

 



 
     
 
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax:  94 11 2585255 , 2596741
E-Mail: epdp@sltnet.lk 
© 2008 www. epdpnews.com, All Rights Reserved.