|
| | கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் திடீர் ராஜினாமா |
|
| | 11.03.2010 - வியாழக்கிழமை
கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் கலாநிதி என். பத்மநாதன் தனது பதவியை திடீர் ராஜினாமச் செய்துள்ளார்.
இவர் நேற்றய தினம் தனது ராஜினாமாக் கடிதத்தை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழவின் தலைவருக்கும் உயர்கல்வி அமைச்சின் செயலாளர் ஊடாக ஜனாதிபதிக்கும் அனுப்பி வைத்துள்ளார். ஊடகங்களுக்குப் பேட்டியளித்துள்ள துணைவேந்தர் மாணவர்கள் சிலருடைய அழுத்தம் காரணமாகவே தனது பதவியை ராஜினாமாச் செய்ததாக தெரிவித்திருப்பதோடு வேறு காரணங்களைக் கூறவில்லை. இதனை அடுத்து கிழக்கு பல்கலைக்கழகத்தின் விவசாயபீடாதிபதியாக இருக்கும் கே. பிரேமகுமார் பதில் துணைவேந்தராக பதவியேற்றுள்ளார்.
|
|
|
| | ஜன்சிலா மஜீத் உலகில் துணிச்சல் மிக்க பெண்களுக்கான விருதினைப் பெற்றுக்கொண்டார். |
|
| | 11.03.2010 - வியாழக்கிழமை
உலகில் துணிச்சல் மிக்க பெண்களுக்கான விருதுக்காக தெரிவான இலங்கையை சேர்ந்த ஜன்சிலா மஜீத் நேற்று தமக்கான விருதை பெற்றுக்கொண்டார்.
அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தில் நடைபெற்ற விழாவில் இந்த விருதை அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளிங்டன் ஜன்சிலா மஜீத்துக்கு வழங்கினார். நிகழ்வின் போது அமரிக்க ஜனாதிபதியின் பாரியார் மிச்செல் பங்கேற்று விசேட உரையாற்றினார்.
விருதினைப் பெற்றுக்கொண்ட ஜன்சிலா மஜீத் புத்தளத்தை தளமாகக்கொண்ட சமூக நிதியம் ஒன்றை நடத்தி வருகிறார். இதன் மூலம் இடம்பெயர்ந்த தமிழ் முஸ்லிம் மக்களுக்கு அவர் உதவிகளை மேற்கொண்டு வருகிறார். அத்துடன் நிலக்கண்ணி உட்பட்ட அறிவூட்டும் செயற்திட்டங்களையும் அவர் நடத்தி வருகிறார். முல்லைத்தீவில் இருந்து இடம்பெயர்ந்த இவர் கடந்த 20 வருடங்களாக இந்த சேவையை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
|
|
|
| | சட்டவிரோத குடியேற்றவாசிகளைத் தடுக்க அவுஸ்திரேலியா இந்தோனேசியா புதிய திட்டம். |
|
| | 11.03.2010 - வியாழக்கிழமை
அவுஸ்ரேலியாவுக்குள் இலங்கையர்கள் உட்பட சட்டவிரோத குடியேற்றவாசிகள் பிரவேசிப்பதை தடுப்பதற்காக இந்தோனேசியாவும் அவுஸ்ரேலியாவும் திட்டம் ஒன்றை வரைந்துள்ளன.
இந்தோனேசிய பிரதமந்திரி அவுஸ்ரேலியா சென்றுள்ள நிலையிலேயே இதற்கான உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதுத்தொடர்பில் கருத்துரைத்துள்ள அவுஸ்ரேலிய வெளியுறவுதுறை அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித் தமது திட்டத்தை வெளியிட முடியாது என அறிவித்துள்ளார். இந்தோனோசியா ஊடாக அவுஸ்ரோலியாவுக்குள் ஊடுருவும் சட்டவிரோத குடியேற்றவாசிகளை தடுப்பதற்காக இரண்டு நாடுகளும் பல மாதங்களாக பேச்சுவார்த்தைகளில் ஈடுப்பட்டுவந்தன. இந்த நிலையிலேயே இந்த புதிய வரைபு இறுதிசெய்யப்பட்டுள்ளதாக ஸ்மித் தெரிவித்துள்ளார். தமக்கிடையிலான உடன்பாடு குறித்து தகவலை வெளியிட்டால் அதனை நடைமுறைப்படுத்துவதில் சட்டவிரோத குடியோற்ற வாசிகளை கடத்துபவர்கள் மத்தியில் இருந்து தடைகள் ஏற்படுத்தப்படலாம் எனவும் அவுஸ்ரேலிய வெளியுறவுதுறை அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
|
|
|
| | மெக்சிகோ நபரே தற்போது உலகின் முதல் பணக்காரர். |
|
| | 11.03.2010 - வியாழக்கிழமை
உலக பணக்காரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் மெக்சிக்கோவை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப தொழில் அதிபர் கார்ல்ஸ் ஸிலிம் உலகில் முதல் பணக்காரர் என்ற நிலையை பெற்றுள்ளார்.
அவருடைய சொத்தின் பெறுமதி 53.5 பில்லியன் டொலர்களாகும். இதன்மூலம் இதுவரை முதல் இடத்தில் இருந்து வந்த மென்பொருள் தயாரிப்பாளரான பில்கேட்ஸ் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். மேலும் இந்தியாவின் தொழில் அதிபரான முகேஷ் அம்பானி முதல் 10 இடங்களுக்குள் 4 ஆம் இடத்தை பெற்றுள்ளார். இவரின் சொத்து 29 பில்லியன் டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
|
|
|
| | யாழ். கோண்டாவில் சபரீச ஐயப்ப தேவஸ்தானத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஒலிபெருக்கி தொகுதியினை அன்பளிப்புச் செய்தார். |
|
| | 11.03.2010 - வியாழக்கிழமை
யாழ். கோண்டாவிலில் அமைந்துள்ள சபரீச ஐயப்ப தேவஸ்தான நிர்வாகப் பிரதிநிதிகளின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் உதவிச் செயற்பாட்டின்கீழ் ஒலிபெருக்கித் தொகுதியொன்றை அன்பளிப்புச் செய்தார்.
முன்னதாக நேற்று மாலை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் யாழ். பணிமனைக்கு ஹரிஹர சுதன் சுவாமி தலைமையில் வருகை தந்திருந்த சபரீச ஐயப்ப தேவஸ்தான நிர்வாகப் பிரதிநிதிகள் தமது தேவஸ்தானம் ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் குறிப்பாக நல்லூர் பிரதேச சபை நிர்வாகம் ஈபிடிபியின் வசம் இருந்தபோது அச்சமயம் தலைவராக இருந்த தோழர் நிஷாந்தன் ஊடாக பெற்றுக்கொண்ட அளப்பரிய உதவிகளை நினைவுகூர்ந்து நன்றி தெரிவித்துக் கொண்டனர். மேலும் தொடர்ந்து பல தடவைகளில் பொருளாகவும் நிதியாகவும் உதவி செய்ததோடு மட்டுமன்றி பல தடவைகள் நேரடியாக விஜயம் செய்தும் தமக்கு உதவிபுரிந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நீண்டகாலம் மக்கள் பணிபுரிய சபரீச ஐயப்பனை பிரார்த்திப்பதாகவும் தெரியப்படுத்தினார்கள்.
இதேவேளை தற்சமயம் போதிய ஒலிபெருக்கி வசதிகள் இன்றி தாம் சிரமப்படுவதாக தேவஸ்தான பிரதிநிதிகள் அறியத்தந்ததை தொடர்ந்து ஈழமக்கள் ஜனநாயக்கட்சி மூலமாக ஒலிபெருக்கி தொகுதி ஒன்றினை வழங்குவதற்கு அமைச்சர் அவர்கள் உடனடியாகவே நடவடிக்கை மேற்கொண்டமை விசேட அம்சமாகும். இதன் தொடர்ச்சியாக இன்றுகாலை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் யாழ். பணிமலையில் வைத்து கோண்டாவில் சபரீச ஐயப்ப தேவஸ்தான நிர்வாகப் பிரதிநிதிகளான ஹரிஹர சுதன் சுவாமி மற்றும் இ. தவகோபால் சுவாமிகள் ஆகியோரிடம் ஒலிபெருக்கி தொகுதி உபகரணங்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கையளித்தார். இந்நிகழ்வில் ஈபிடிபியின் தலைமைச் செயலக பொறுப்பாளர் ஆர்.கே.வின்சன் நல்லூர் தொகுதி பொறுப்பாளர் அ.ரவீந்திரதாசன் ஆகியோரும் சமூகமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
|
|
|
| | மோட்டார் சைக்கிளால் மோதுண்ட 4 வயதுச் சிறுமி மரணம் - பண்டத்தரிப்பில் நிகழ்ந்தது. |
|
| | 11.03.2010 - வியாழக்கிழமை
வலிகாமம் மேற்கு பண்டத்தரிப்பு வடலியடைப்பு மோட்டார் சைக்கிளால் மோதுண்ட 4 வயதுச் சிறுமி பரிதாபகரமாக உயிரிழந்தார்.
நேற்று மாலை இடம்பெற்ற இக்கோர விபத்தில் புவனேந்திரன் றொஷனி என்ற வடலியடைப்பைச் சேர்ந்த 4 வயது சிறுமியே மரணமடைந்தவராவார். அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் சிறுமியை மோதித் தள்ளிய பின்னர் அங்கிருந்து தப்பியோடிவிட்டதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். மிக மோசமாக காயமடைந்த சிறுமி றொஷானி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுவதற்கு முன்னரே உயிரிழந்து விட்டதாக தெரியவருகின்றது.
விபத்து குறித்து விசாரணை நடாத்தி வரும் வட்டுக்கோட்டை பொலிசார் தப்பியோடிய மோட்டார் சைக்கிள் ஒட்டிகளைத் தேடி வலைவிரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
|
|
| | இலங்கையில் வேகமாக அதிகரிக்கும் குளுகோமா நோயினால் பலருக்கு கண்பார்வை பாதிக்கப்படும் ஆபத்து. |
|
| | 11.03.2010 - வியாழக்கிழமை
இலங்கை மக்களில் நூற்றுக்கு பத்திலும் அதிகமானோர் குளுகோமா நோயினால் பீடிக்கப்பட்டிருப்பதாக ஆய்வுகளில் இருந்து தெரியவந்துள்ளது.
உலக குளுகோமா தினத்தையொட்டி கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய துறைசார் நிபுணர் வைத்தியர் முதிதா குலதுங்க இதனை தெரிவித்ததுடன் கண்பார்வை குறைபாடுகளுக்கு குளுகோமாவே பிரதானமான காரணமாக அமைவதாகவும் அவர் குறிப்பிட்டார். நாட்டு மக்களின் கண்பார்வை குறைபாடுகள் தொடர்பாக நோய்களை தடுக்கும் பொருட்டு விசேட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவேண்டும் என இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பொதுமக்கள் சுகாதாரம் தொடர்பான பிரதி பணிப்பாளர் பாலித மகிபால தெரிவித்துள்ளார்.
|
|
|
| | எல்லை கடந்த இலங்கை கடற்றொழிலாளர்கள் சென்னைக் கடலில் கைது. |
|
| | 11.03.2010 - வியாழக்கிழமை
எல்லை கடந்து மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்றொழிலாளர்கள் சிலர் சென்னை கடற்பகுதியில் கரையோர காவற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சென்னைக்கு அருகே இந்திய கடற்பகுதியில் எல்லை மீறி கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த மேலும் சில இலங்கை கடற்றொழிலாளர்களே நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களை கைதுசெய்த இந்திய கரையோர காவற்படையினர் அவர்களிடமிருந்த படகு ஒன்றையும் 600 கிலோகிராம் கடலுணவுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட இலங்கை கடற்றொழிலாளர்கள் சென்னை துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை நேற்று முன்தினமும் இலங்கை கடற்றொழிலாளர்கள் ஆறுபோர் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
|
|
|
| | ரஷ்ய பிரதமர் இந்தியா விஜயம். |
|
| | 11.03.2010 - வியாழக்கிழமை
ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடின் இன்று இந்தியப் பயணம் மேற்கொள்கிறார்.
இரண்டு நாள் பயணமாக இந்தியா செல்லும் ரஷ்ய பிரதமர் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் ஆகியோரைச் சந்திக்கவுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையில் 20 ஆயிரம் கோடி ரூபா மதிப்பில் முக்கிய ராணுவ ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. ரஷ்ய போர்க்கப்பலான அட்மிரல் கோர்ஸ்கோவ் குறித்த நீண்ட நாளாக தாமதிக்கப்பட்டு வந்த ஒப்பந்தம் இப்போது கையெழுத்தாக உள்ளது. இதன்பிரகாரம் தற்போது ரஷ்யாவில் பராமரிப்புப் பணிகளில் இருக்கும் கோர்ஸ்கோவ் கப்பல் 2013ல் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும். அக்கப்பலின் ஐ.என்.எஸ்.விக்ரமாதித்யா என் ஏற்கனவே மாற்றப்பட்டு விட்டமை குறிப்பிடத்தக்கது. பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் புடின் இடையே கையெழுத்தாக இருக்கும் ராணுவ ஒப்பந்தத்தின் மதிப்பு சுமார் 20 ஆயிரம் கோடி ரூபா என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
|
|
|
| | எமது மக்களுக்கு சேவை செய்யக் கூடியவர்களையே எமது மக்கள் தெரிவு செய்ய வேண்டும்! - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா |
|
| | 11.03.2010 - வியாழக்கிழமை
யாழ் குடாநாட்டில் மாணவர்களது ஆக்கத் திறன் வெளிப்பாட்டு முன்னேற்றங்களை இப்போது பரவலாகக் காணக் கூடியதாக உள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (10) மாலை உரும்பிராய் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் இல்லங்களுக்கிடையிலான வருடாந்த விளையாட்டுப் போட்டிகளில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் இங்கு கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், எமது மாணவர்கள் முதற்கொண்டு அனைத்துத் தரப்பினரதும் ஆக்கத் திறன் வெளிப்பாடுகள் நல்ல வளர்ச்சி நிலை பெற வேண்டும் என்றும் இத்திறன்களை அவர்கள் எமது சமூகத்தின் மேம்பாடு கருதி பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்ததுடன், எமக்குக் கிட்டக் கூடிய சந்தர்ப்பங்கள் அனைத்தையும் உரிய முறையில் பயன்படுத்தி எமது சமூகத்தினதும் பிரதேசங்களினதும் முன்னேற்றத்திற்கு அனைவரும் உழைக்க முன்வர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் எமது மக்கள் தங்களுக்கு சேவை செய்யக் கூடிய சிறந்த பிரதிநிதிகளை மாத்திரம் தெரிவு செய்வதன் மூலம் எமது மக்களுக்கான ஒளிமயமான எதிர்காலத்தை அமைத்துக் கொள்ள இயலும் என்பதை அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மத்தியில் விளக்கிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எமது மக்களின் தெரிவுகள் யாவும் அம்மக்களின் அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்யும் நபர்களாக அமைவதே இக்காலகட்டத்தின் அவசியமாகும் என்றும் தெரிவித்தார்.
எமது மக்களுக்கென நாளாந்தம் உழைக்கும் சக்திகளை எமது மக்கள் நன்கறிவார்கள் என்பதால் அம்மக்களின் தெரிவு தவறாக இடம்பெறாது என்ற நம்பிக்கை தனக்கிருப்பதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
|
|
|
| | கோண்டாவில் சபரீச ஐயப்ப தேவஸ்தான நிர்வாகத்தினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களைச் சந்தித்தனர். ஒலிபெருக்கி தொகுதியொன்றும் அமைச்சரினால் வழங்கப்படுகின்றது. |
|
| | 10.03.2010 - புதன்கிழமை
யாழ். கோண்டாவிலில் அமைந்துள்ள சபரீச ஐயப்ப தேவஸ்தான நிர்வாகப் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களைச் சந்தித்து தமது தேவஸ்தானத்திற்கு அமைச்சரவர்கள் ஆற்றிவரும் உதவிப்பணிகளுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டதோடு தமது வேண்டுகோள்களையும் தெரியப்படுத்தினார்கள்.
இன்று மாலை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் யாழ். பணிமனைக்கு ஹரிஹர சுதன் சுவாமி தலைமையில் வருகை தந்திருந்த சபரீச ஐயப்ப தேவஸ்தான நிர்வாகப் பிரதிநிதிகள் தமது தேவஸ்தானம் ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் குறிப்பாக நல்லூர் பிரதேச சபை நிர்வாகம் ஈபிடிபியின் வசம் இருந்தபோது அச்சமயம் தலைவராக இருந்த தோழர் நிஷாந்தன் ஊடாக பெற்றுக்கொண்ட அளப்பரிய உதவிகளை நினைவுகூர்ந்து நன்றி தெரிவித்துக் கொண்டனர். மேலும் தொடர்ந்து பல தடவைகளில் பொருளாகவும் நிதியாகவும் உதவி செய்ததோடு மட்டுமன்றி பல தடவைகள் நேரடியாக விஜயம் செய்தும் தமக்கு உதவிபுரிந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நீண்டகாலம் மக்கள் பணிபுரிய சபரீச ஐயப்பனை பிரார்த்திப்பதாகவும் தெரியப்படுத்தினார்கள்.
இதேவேளை தற்சமயம் போதிய ஒலிபெருக்கி வசதிகள் இன்றி தாம் சிரமப்படுவதாக தேவஸ்தான பிரதிநிதிகள் அறியத்தந்ததை தொடர்ந்து ஈழமக்கள் ஜனநாயக்கட்சி மூலமாக ஒலிபெருக்கி தொகுதி ஒன்றினை வழங்குவதற்கு அமைச்சர் அவர்கள் உடனடியாகவே நடவடிக்கை மேற்கொண்டமை விசேட அம்சமாகும். மேலும் தேவஸ்தான கோபுர புனரமைப்பிற்கும் நிதி உதவி வழங்க தாம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தேவஸ்தான நிர்வாகப் பிரதிநிதிகளிடம் உறுதியளித்தார்.
இன்றையதினம் வருகை தந்திருந்த தேவஸ்தான பிரதிநிதிகள் அனைவரும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேற்கொண்ட பெருமுயற்சி காரணமாக கடந்த முறை தென்னிந்திய சபரீச ஐயப்ப தேவஸ்தான யாத்திரை சென்று மலையேறி வந்தவர்கள் என்பது விசேட அம்சமாகும்.
|
|
|
| | தமது தேவைகள் கோரிக்கைகள் குறித்து யாழ். மாநகர பின்தங்கிய பிரதேச மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் தெரியப்படுத்தினர். |
|
| | 10.03.2010 - புதன்கிழமை
யாழ். மாநகரசபைப் பிரதேசத்திற்குள் வதியும் பின்தங்கியுள்ள பிரதேச மக்களான கொட்டடி முத்தமிழ் சனசமூக நிலையப்பகுதி மக்களும் மீனாட்சிபுரம் பிரதேச மக்களும் தமது கோரிக்கைகள் மற்றும் தேவைகள் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கவனத்திற்கு நேரடியாக கொண்டுவந்தனர்.
தமது வாழ்க்கைத் தரம் உயரும் வகையில் தமது ஜீவனோபாய தொழிற்துறைகளை ஏற்படுத்தித் தரும்படி கொட்டடி முத்தமிழ் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்த அதேநேரம் இயலுமான சுயதொழில் முயற்சிகளை ஆரம்பிப்பதற்கு உதவி செய்யும்படியும் கேட்டுக்கொண்டனர். மற்றொருபுறம் ஏறக்குறைய முப்பது வருடங்களுக்கு மேலாக தாம் வசித்துவரும் தமது காணிகளுக்கு உறுதிகளை பெற்றுத்தரும்படி மீனாட்சிபுரம் பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுத்தனர். காலாதிகாலமாக தாம் வசித்துவரும் இடத்தினை பல்வேறு முயற்சிகளின் நிமித்தம் கையகப்படுத்த பல்வேறு முயற்சிகள் நடந்து வருவதாக தெரிவித்த அம்மக்கள் அதனை தடுத்து நிறுத்துமாறும் கேட்டுக்கொண்டனர்.
இச்சந்திப்பின்போது யாழ். மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா பிரதி முதல்வர் துரைராஜா இளங்கோ மாநகரசபை உறுப்பினர் கோமகன் ஆகியோரும் உடனிருந்ததுடன் தகுதிவாய்ந்த சட்டத்தரணியும் உடனிருந்து வருகை தந்திருந்த மக்களுக்கு சட்ட உதவிகள் வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.
|
|
|
| | பல்லாண்டு நிறைவு விழாக்களை காணும் யாழ். பொது அமைப்புக்கள் அதில் பங்குபற்றுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு அழைப்பு விடுத்தனர். |
|
| | 10.03.2010 - புதன்கிழமை
யாழ்ப்பாணத்தில் சிறப்பாக செயற்பட்டுவரும் சனசமூக நிலையங்கள் பலவும் தமது ஆண்டு விழாக்களின் கொண்டாட்டங்களில் பிரதம விருந்தினராக பங்குபற்றி சிறப்பிக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இன்று மாலை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் யாழ். பணிமனைக்கு யாழ். குருநகர் கிங்ஸ்கிரீன் சனசமூக நிலைய தலைவர் விஜயகாந்த் மற்றும் செயலாளர் குயின்ரஸ் ஆகியோர் தலைமையில் வருகைதந்த நிர்வாகப் பிரதிநிதிகளும் உறுப்பினர்களும் நாற்பத்தைந்தாவது ஆண்டு நிறைவு விழாவினைக் காணும் தமது அமைப்பின் ஆண்டுவிழாவில் பிரதம விருந்தினராக பங்குபற்றி சிறப்பிக்கும் வண்ணம் கேட்டுக்கொண்டனர். இதேவேளை இன்று மாலை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் யாழ். பணிமனைக்கு வருகை தந்திருந்த அரியாலை கலைமகள் சனசமூக நிலையத்தினரும் தமது நாற்பத்தியேழாவது ஆண்டு நிறைவு விழாக்களில் பிரதம விருந்தினராக பங்குகொள்ளும்படி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களைக் கேட்டுக்கொண்டனர். கலைமகள் சனசமூகநிலைய தலைவர் இ.மதிதரன் செயலாளர் கே.உதயசீலன் ஆகியோர் தலைமையில் வருகை தந்த நிர்வாகப் பிரதிநிதிகளும் உறுப்பினர்களுமே மேற்படி வேண்டுகோளை விடுத்தனர்.
மேற்படி வேண்டுகோள்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஏற்றுக்கொண்ட அதேவேளை கடந்த காலங்களில் பொருளாகவும் நிதியுதவியாகவும் பல்வேறு உதவிகளை மேற்கொண்டு தமக்கு நல்கிய அனைத்து உதவிகளுக்கும் சனசமூக நிலைய அங்கத்தவர்கள் தமது நன்றிகளையும் தெரியப்படுத்திக்கொண்டனர். இச்சந்திப்புக்களின்போது யாழ். மாநகர பிரதி முதல்வர் துரைராஜா இளங்கோவும் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.
|
|
|
| | தென்பகுதி வாகனங்கள் யாழில் மோதின. |
|
| | 10.03.2010 - புதன்கிழமை
தென்பகுதியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த பஸ் மற்றும் சொகுசு கார் என்பன இன்று காலை நகர மத்தியில் விபத்திற்குள்ளாகின.
யாழ். மணிக்கூட்டுக் கோபுர வீதிச்சந்தியில் இன்று காலை ஒன்பது மணியளவில் இடம்பெற்ற மேற்படி விபத்துச் சம்பவத்தில் தென்பகுதியில் இருந்து சுற்றுலாப்பயணிகளை ஏற்றிவந்த டபிள்யு.பி.என்.ஏ3020 என்ற இலக்கமுடைய தனியார் பஸ்வண்டியானது தென் பகுதியில் இருந்து சுற்றுலாப்பயணமாக வந்த டபிள்யு.பி.ஜே.பீ. என்ற இலக்கமுடைய சொகுசு காரினை மோதித்தள்ளியது. இதில் காரின் பின்பகுதி பலத்த சேதமடைந்தபோதும் பஸ்ஸில் சிறு சேதம்கூட ஏற்படவில்லை என்பதுடன் எவருக்கும் சிறு காயம் கூட ஏற்படவில்லை என்பது ஆச்சரியமான விடயமாகும். சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த யாழ். போக்குவரத்துப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
|
|
|
| | நெடுந்தீவு கூட்டுறவுச் சங்கத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்
10 இலட்சம் ரூபா விஷேட கடனுதவி! |
|
| | 10.03.2010 - புதன்கிழமை
நெடுந்தீவு பகுதிக்கான இருநாள் விஜயத்தை மேற்கொண்டிருந்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நெடுந்தீவு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்திற்கு 10 இலட்சம் ரூபா கடனுதவியை வழங்கினார்.
மேற்படி கூட்டுறவுச் சங்கத்தில் பொதுமக்களுக்கான நுகர்வுப் பொருட்கள் இல்லை என்றும் இதனால் அதிக விலை கொடுத்து தனியார் கடைகளில் பொருட்களை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் முறைப்பாடு செய்ததையடுத்து இன்றைய தினம் (10) காலை கூட்டுறவுச் சங்கத்திற்குச் சென்ற அமைச்சர் அவர்கள் நிர்வாகிகளுடன் கலந்துரையாடியதுடன் கூட்டுறவுச் சங்கத்தின் தற்போதைய நிலையையும் கண்டறிந்தார்.
இதனையடுத்து மகேஸ்வரி நிதியத்தின் மூலம் 10 இலட்சம் ரூபா வட்டியில்லாக் கடனை வழங்கிய அமைச்சர் அவர்கள் இந்நிதியைக் கொண்டு நெடுந்தீவு பகுதி மக்களுக்குத் தேவையான நுகர்வுப் பொருட்களை கொள்வனவு செய்து வழங்குமாறும் அதே நேரம் கூட்டுறவுச் சங்கத்தின் செயற்பாடுகளை விஸ்தரித்து அதனைப் பலப்படுத்திக் கொள்ளுமாறும் கூட்டுறவுச் சங்க நிர்வாகிகளுக்குப் பணிப்புரை வழங்கியமை குறிப்பிடத்தக்கதாகும்.
|
|
|
| | நெடுந்தீவிற்கான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது இருநாள் விஜயத்தில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து ஆய்வு! |
|
| | 10.03.2010 - புதன்கிழமை
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இரு நாட்களுக்கான விஜயமொன்றை மேற்கொண்டு நேற்றைய தினம் நெடுந்தீவு பகுதிக்குச் சென்றிருந்தார்.
யாழ் குடாநாட்டிலுள்ள ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் நேரடியாக விஜயம் செய்து அப்பகுதி மக்களினது தேவைகள் மற்றும் பிரச்சினைகள் குறித்தும் அவ்வப் பகுதிகளில் முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்தி மேம்பாட்டு வேலைத்திட்டங்கள் குறித்தும் ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை எடுக்கவிருப்பதாக பல மாதங்களுக்கு முன்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பொதுமக்களுக்கு வாக்குறுதி வழங்கியிருந்தமைக்கு இணங்கவே அமைச்சர் அவர்களது இவ்விஜயம் அமைந்திருந்தது.
நேற்றைய தினமும் இன்றைய தினமும் நெடுந்தீவில் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று மக்களுடன் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று கலந்துரையாடிய அமைச்சர் அவர்கள் அம்மக்கள் முகங்கொடுத்து வருகின்ற பிரச்சினைகள் மற்றும் தேவைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது கடுமையான உழைப்பினால் கட்டி எழுப்பப்பட்டிருக்கும் நெடுந்தீவு பிரதேசமானது இன்றைய நிலையில் கடந்தகால அனர்த்தங்கள் காரணமாக பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து நிற்பதை உணரக் கூடியதாக இருக்கிறது.
இந்த நிலையில் குடிநீர் பாதைகள் செப்பனிடப்படாமை மின்சாரம் வீட்டு வசதிகள் மலசல கூடங்கள் கடல் மற்றும் தரைப் போக்குவரத்து போன்ற அடிப்படைத் தேவைகளில் குறைபாடுகள் நிலவுவதாகப் பொதுமக்கள் எடுத்துக் கூறியதையடுத்து வெகுவிரைவில் கட்டம் கட்டமாக இப்பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்பதை சுட்டிக் காட்டிய அமைச்சர் அவர்கள் அம்மக்களின் கடல் போக்குவரத்து வசதி கருதி இன்னுமொரு பாரிய படகினை வழங்குவதற்கான நடவடிக்கைகளை இப்போதே தான் எடுத்துள்ளதாகவும் இன்னும் சில வாரங்களில் இப்படகு போக்குவரத்திற்காக விடப்படும் என்றும் தெரிவித்தார். அத்துடன் தரைப் போக்குவரத்தில் ஈடுபடுத்த பெரியளவிலான பேரூந்து ஒன்றை வழங்க ஏற்பாடு செய்வதாகவும் தெரிவித்தார்.
இதனையடுத்து அப்பகுதி தொண்டர் ஆசிரியர்கள் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் முன்பள்ளி ஆசிரியர்கள் விளையாட்டு கழகப் பிரதிநிதிகள் சமூகப் பெரியார்கள் போன்ற பலரையும் அமைச்சர் அவர்கள் சந்தித்து கலந்துரையாடினார்.
இதன் போது நெடுந்தீவு பகுதியில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் விரிவாக ஆராய்ந்துள்ளார். அமைச்சர் அவர்களது நெடுந்தீவுப் பயணத்தின் போது நெடுந்தீவு மகா வித்தியாலயம் மற்றும் சுப்பிரமணிய வித்தியாலய இல்லங்களுக்கிடையிலான வருடாந்த விளையாட்டுப் போட்டிகளிலும் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
|
|
|
| | கிராமத்தை அபிவிருத்தி செய்வதன் ஊடாக நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டும். - ஜனாதிபதி தெரிவிப்பு. |
|
| | 10.03.2010 - புதன்கிழமை
கிராமத்தை அபிவிருத்தி செய்வதன் ஊடாக நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான வாய்ப்பு ஏற்படும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ பெலிஅத்த பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி கிராமத்தை அபிவிருத்தி செய்வதன் பொருட்டு அடிப்படை தேவைகளை அரசாங்கம் பூர்த்தி செய்து கொடுக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் நாட்டு மக்களுக்கு தேவையான அபிவிருத்தியினை வழங்கும் பொருட்டு கடந்த பல வருடங்களாக தமது அரசாங்கம் அர்ப்பணிப்புகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். எனினும் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் மக்களின் வாக்குகளை கருத்தில் கொண்டு நாட்டின் அபிவிருத்திக்கு பாதகத்தை ஏற்படுத்தும் தீர்மானங்களை தமது அரசாங்கம் மேற்கொண்டிருக்கவில்லை என ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியதுடன் நாட்டை அபிவிருத்தி பாதைக்கு இட்டுச்செல்லும் இந்த பயணத்திற்கு சகல மக்களும் உதாரணமாக இருப்பதாகவும் மேலும் தெரிவித்தார்.
|
|
|
| | யாழில் பொதுமக்கள் தொடர்பு நிலையம் ராணுவத்தளபதியினால் திறந்துவைப்பு. |
|
| | 10.03.2010 - புதன்கிழமை
யாழ்ப்பாணத்தில் பொதுமக்களுடனான தொடர்புகளை மேலும் விஸ்தரிக்கும் நடவடிக்கையாக பொதுமக்கள் தொடர்பாடல் அலுவலகம் ஒன்று நேற்று யாழ்ப்பாணம் வைத்தியசாலை பாதையில் திறக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஜெகத் ஜெயசூரியா இவ்வலுவலகத்தை திறந்து வைத்தார். மேற்படி அலுவலகம் வாரத்தின் ஏழு நாட்களும் இருபத்திநான்கு மணிநேரமும் திறந்திருக்கும் வகையில் அனைவருக்கும் பயனபடும் வகையில் இயங்கவுள்ளதாக இராணுவத் தளபதி அங்கு உரையாற்றும்போது தெரிவித்துள்ளார். இதன்மூலம் குடா நாட்டு மக்களின் பிரச்சினைகளை விரைவில் தீர்த்துவைக்கூடியதாக இருக்கும் என்பதுடன் குடா நாட்டு மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வரும் அரசாங்கத்தின் நல்லிணக்க திட்டத்தின் கீழ் இவ்வகையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் ராணுவத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.
|
|
|
| | 2004 பொதுத் தேர்தலில் ஒரு சதவீதத்திற்கு மேலான வாக்குகளைப் பெற்ற கட்சிகளுக்கு நிதியுதவி. |
|
| | 10.03.2010 - புதன்கிழமை
2004 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் போட்டியிட்டு நூற்றுக்கு ஒன்றுக்கு மேலதிகமான வாக்கு வீதத்தை பெற்றுக்கொண்ட கட்சிகளுக்கு உதவி தொகைகளை வழங்க தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக தீர்மானித்துள்ளார்.
தேர்தல் சட்டத்தின் தெரிவிக்கப்பட்டுள்ள பணிப்புரைக்கு அமைய இந்த உதவி தொகை வழங்கப்படவுள்ளதாக தேர்தல்கள் செயலகத்தின் விசேட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். 2004 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் போட்டியிட்ட கட்சிகள் அந்த பெயருடனும் அதே சின்னத்துடனும் போட்டியிடும் சந்தர்ப்த்திலேயே இந்த உதவி தொகை கிடைக்கும். இதன்படி ஒரு வாக்குக்கு 50 சதம் என்ற வகையில் வழங்கப்படவுள்ளதாக தேர்தல்கள திணைக்களம் தெரிவித்துள்ளது. எனினும் அனைத்து கட்சிகளும் இதற்காக விண்ணப்பிக்கவில்லை எனினும் தேர்தலுக்கு பின்னர் இந்த உதவி தொகையை பெறுவதற்கு விண்ணப்பிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
|
|
| | அந்தமானில் அத்துமீறி மீன்பிடித்த இலங்கையர் கைது. |
|
| | 10.03.2010 - புதன்கிழமை
அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்டடிருந்த மேலும் சில இலங்கையர்கள் நேற்று இந்திய கரையோர காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்தமான் தீவு கடல் பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த இலங்கை கடற்றொழிலாளர்கள் ஆறு பேர் இவ்வாறு கைதுசெய்யப்பட்டதுடன் அவர்களது படகு ஒன்றும் கரையோர காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டள்ளது. இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இலங்கை கடற்றொழிலாளர்கள் மீது வழங்கு தொடுக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த ஐந்தாம் திகதியும் இவ்வாறு சட்டவிரோத மீன்பிடியில் ஈடுப்பட்டிருந்த ஐந்து இலங்கையர்கள் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
|
|