20 ஆவது சீர்திருத்தச் சட்டம் உயர் நீதிமன்றத்தால் நிராகரிப்பு!

Tuesday, September 19th, 2017

அரசால் முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது திருத்தச்சட்ட வரைபு அரசியல் அமைப்புக்கு ஏற்புடையது அல்ல என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

20 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பான விவாதம் நாளை  நாடாளுமன்றில் நடைபெற இருந்த நிலையில் அது கால வரையறை இன்றி பிற்போடப்பட்டுள்ளதாக முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் உயர்நீதிமன்றம் 20 ஆவது திருத்தம் அரசியல் அமைப்புக்கு ஏற்புடையது அல்ல என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே ஜனவரியில் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்தவதற்கு கட்சித் தலைவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

 

Related posts: