வெள்ளவத்தை அனர்த்தம் குறித்து ஆராய விசேட குழு!

Saturday, May 20th, 2017

கொழும்பு – வெள்ளவத்தையில் இடம்பெற்ற அனர்த்தம் தொடர்பில் ஆராய, வீடமைப்புத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசவின் பணிப்பின் பேரில் நியமிக்கப்பட்ட விசேட குழு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக வீடமைப்பு அதிகார சபையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவந்த 5 மாடிக் கட்டடம் நேற்று சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்ததுடன், 20இற்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.

மேற்படி அனர்த்தத்தில் படுகாயமடைந்த 27 பேர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அவர்களில் 9 பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மேலும் இருவர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள நிலையில் அவர்களை மீட்கும் பணிகள் இரண்டாவது நாளாகவும் தொடர்ந்து வருகின்றன.

Related posts:


மக்கள் ஆணையை தேர்தல் ஆணைக்குழு வெற்றிபெறச் செய்யவேண்டும் – பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!
நாடெங்கிலும் 500 உற்பத்திக் கிராமங்கள் - அங்குரார்ப்பண நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்ஹ ...
குழந்தையுடன் யாசகம் பெற்று வந்த பெண் , யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு கடுமையாக எச்சரிக்க...