ஈழ மக்கள் ஜனநாயக கட்சி இந்த தேர்தலில் அதிக வெற்றி பெறும் – கட்சியின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாக செயலாளர் தவநாதன் நம்பிக்கை!

Saturday, February 10th, 2018

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி இந்த தேர்தலில் அதிக வெற்றி பெறும் என தான் நம்புவதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளரும் மாகாண சபை உறுப்பினருமான வை.தவநாதன் தெரிவித்தார்

இன்று கிளிநொச்சி அம்பாள் நகர் பகுதியில் வாக்களிப்பு நிலையத்தில் தனது வாக்குகளை பதிவு செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்

கடந்த ஒன்றரை மாதங்களாக தமது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவளர்களும் தீவிரமான பரப்புரையில் ஈடுபாடு மக்களுக்கு தமது கட்சி சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்தி இருந்ததாகவும் குறிப்பாக தேர்தல் சட்டங்களுக்கு அமைவாக தமது கட்சி வெற்றிபெறும் எனவும் பல கட்சிகள் சட்டங்களை மீறியதாக பதிவுகள் இருகின்ற போதிலும் சட்டங்களை மதித்து ஜனநாயக தேர்தலை  எதிர் கொள்ளுவதில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி முன்மாதிரியாக செயற்படுதாக அவர் மேலும் தெரிவித்தார்

Related posts:


பூநகரி முட்கொம்பன் பகுதி கல்வி வளர்ச்சிக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி தொடர்ந்தும் பங்களிப்பை வழங்கும் - ...
வெடுக்குநாரி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் ஏற்பட்டிருந்த நடைமுறைச் சிக்கல்களுக்கு ஈ.பி.டிபி யின் வன்னி ம...
சௌபாக்கிய வேலைத்திட்டத்தின் கீழ் கண்டாவளை பிரதேச மக்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்பாளர...