அமரர் பரமநாதனின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலிமரியாதை!

Wednesday, December 13th, 2017

காலஞ்சென்ற சுப்பிரமணியம் பரமநாதனின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலிமரியாதை செலுத்தியுள்ளார்.

பலாலி வீதி, உரும்பிராயில் அமைந்துள்ள அன்னாரது தற்காலிக இல்லத்திற்கு இன்றையதினம்(12) சென்ற டக்ளஸ் தேவானந்தா பூதவுடலுக்கு அஞ்சலிமரியாதை செலுத்தியதுடன் அன்னாரது பிரிவால் தயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர் நண்பர்களுக்கும் அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்திருந்தார்.

உடுவில் கிழக்கு சுன்னாகத்தை பிறப்பிடமாகவும் கொல்லங்கலட்டியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் சுப்பிரமணியம் பரமநாதன் தனது 83 ஆவது வயதில் நேற்றையதினம் காலமானர். அன்னாரது இறுதிக் கிரியைகள் நாளையதினம் (13) நடைபெறவுள்ளது.

இதன்போது கட்சியின் வலிகாமம் கிழக்கு பிரதேச நிர்வாக செயலாளர் இராமநாதன் ஐங்கரன் உடனிருந்தார்.

12

Related posts:


பருத்தித்துறை சாலையின் பேருந்து சேவை கட்டைக்காட்டுடன் நிறுத்தப்படுவது ஏன்? - ஈ.பி.டி.பியின் பருத்தித...
தோழர் ஐயாத்துரை என்ற சிறந்த புரட்சியாளனை வலி.வடக்கு இழந்த தவிக்கின்றது – அஞ்சலி உரையில் ஈ.பி.டி.பியி...
குடிநீர் வழங்கலை ஒரு சில மாதங்களுக்கு அனர்த்தகால நிவாரணமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஈ.பி.டி...