ஹங்கேரியில் நான்காவது முறையாக பிரதமராகும் விக்டர் ஆர்பன்!

Tuesday, April 10th, 2018

ஹங்கேரியில் சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட பிரதமர் விக்டர் ஆர்பன் நான்காவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார்.

ஹங்கேரி நாட்டில் சமீபத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 199 இடங்களுக்கு ஆளும் கட்சியான பிட்ஸ் கட்சியும், ஜோப்பிக் கட்சியும், இடதுசாரி கூட்டணி கட்சிகள் போட்டியிட்டன.

ஆளும் கட்சியான பிட்ஸ் கட்சி 134 இடங்களிலும், ஜோப்பிக் கட்சி 26 இடங்களிலும், இடதுசாரி கூட்டணிகள் 20 இடங்களிலும் வென்றுள்ளதாக அந்நாட்டு தேசிய தேர்தல் அலுவலகம் அறிவித்துள்ளது.

இதன்மூலம் மூன்றில் இரண்டு பங்கு இடங்களை பிடித்த பிட்ஸ் கட்சி அங்கு ஆட்சியை அமைக்கிறது. மேலும், பிரதமர் விக்டர் ஆர்பன் நான்காவது முறையாக பிரதமர் பதவியை வகிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: