பாக்தாத்தில் தற்கொலைக் தாக்குதலில் 6 பேர் பலி!
Sunday, September 25th, 2016ஈராக் தலைநகர் பாக்தாத்தில் தற்கொலை குண்டுதாரி ஒருவர் நடத்திய தாக்குதலில் குறைந்தது 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், பலர் காயம் அடைந்துள்ளனர்.
ஷியா முஸ்லீம் சமூகத்தை சேர்ந்தவர்கள் அதிகம் வசிக்கக்கூடிய இஸ்கான் மாவட்டத்தில் இந்த குண்டுவெடிப்பு நடந்துள்ளது.
இந்த தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை.
ஆனால், பாக்தாத்தில் இஸ்லாமிய அரசு என அழைத்து கொள்ளும் அமைப்பினர் இது போன்ற வெடிகுண்டு தாக்குதல்களை அடிக்கடி நிகழ்த்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Related posts:
அலெப்போவில் 48 மணி நேர போர் நிறுத்தம்!
சி.ஐ.ஏவின் உளவுக் கருவிகள் தொடர்பில் தகவல் வெளியிட்ட விக்கிலீக்ஸ்!
அணுவாயுதத் தாக்குதல் நடத்துவோம் என வடகொரியா எச்சரிக்கை!
|
|