பரிசில் பாரிய அழிவு தவிர்க்கப்பட்டது!

Friday, October 6th, 2017

பாரிய குண்டுத் தாக்குதலுக்கு தயாராக இருந்த கனரகவாகனம் ஒன்று தலைநகர் பரிசில் இனங்காணப்பட்டு காவல்துறையினரால் தடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தாக்குதலுக்கு உரிய கருவிகள் பொருத்தப்பட்ட ஆறு எரிபொருள் கலன்கள் காவல்துறையினரால் இனங்காணப்பட்டுள்ளது. கட்டிட வேலைகளுக்கு பயன்படுத்தப்படும் சீமெந்து கலவை இயந்திர கனரக வாகனத்துக்குள்ளேயே இவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தலைநகர் பரிசின் 19ஆம் வட்டாரப்பகுதியில் காலை 8மணியளவில் இவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.கடந்த சில நாட்களுக்கு முன்னர் குடியிருப்பு பகுதி ஒன்றில் இருந்து தாக்குதலுக்கு தயாராக இருந்த எரிவாயுக்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடதக்கது

Related posts: