பத்திரிகையாளர் சுஜாத் புஹாரி கொலையாளிகளின் படம் வெளியானது!

Sunday, June 17th, 2018

ஜம்மு – காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் மூத்த பத்திரிகையாளரும் ரைசிங் காஷ்மீர் பத்திரிகை ஆசிரியருமான சுஜாத் புஹாரி (வயது-53) மற்றும் அவரது பாதுகாவலர்கள் இருவரும் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய கொலையாளிகள் மூவரின் சி.சி.டி.வி. புகைப்படங்களை வெளியிட்டுள்ள பொலிஸார் மக்களின் உதவியை நாடியுள்ளனர்.

லால் சௌக் பகுதியில் உள்ள பத்திரிகை அலுவலகத்திலிருந்து வியாழக்கிழமை இப்தார் விருந்து நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சுஜாத் புஹாரி காரில் புறப்பட்டார். அப்போது புஹாரியுடன் அவரது பாதுகாவலர்கள் இருவரும் காரில் இருந்தனர்.

அப்போது பத்திரிகை அலுவலகத்துக்கு வெளியே நின்று கொண்டிருந்த மூன்று பேர் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் புஹாரி இருந்த காரை நோக்கி சரமாரியாக சுட்டனர். காரைத் துளைத்து கொண்டு குண்டுகள் பாய்ந்தன. இதில் புஹாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் இருந்த பாதுகாவலர்களில் ஒருவரும் பலியானார். மேலும் ஒரு பாதுகாவலர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

துப்பாக்கியில் சுட்ட மர்ம நபர்கள் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பியோடி விட்டனர். அவர்கள் வெகு நாட்கள் சுஜாத் புஹாரியின் நடவடிக்கைகளை கண்காணித்து கொலை சம்பவத்தை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கொலை சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வரும் பொலிஸார் தற்போது சி.சி.டி.வி. கமராவில் பதிவான கெலையாளிகள் மூவரின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. கொலையாளிகளை கண்டுபிடிக்க உதவுமாறு பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.

 

Related posts: