துருக்கியில் இரு வேறு இடங்களில் குண்டுத் தாக்குதல்!

Thursday, August 11th, 2016

துருக்கியில் ஒரே நேரத்தில் இரு வேறு இடங்களில் குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

துருக்கியின் எல்லைப் பகுதிகளில் முகாம்களை அமைத்துள்ள குர்திஷ் ஆயுததாரிகள் அரச படைகளுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். தியா பகர் நகரில் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக மேற்கொண்ட கார் குண்டுத் தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் 12 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கிசில்டேப் நகரில் நடத்திய மற்றைய குண்டுத் தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்போது 25 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. துருக்கியில் இதுவரை 100 க்கும் அதிகமானவர்கள் குர்திஸ் ஆயுததாரிகள் மேற்கொண்ட தாக்குதல்களினால் உயிரிழந்துள்ளனர்.  மேலும் கடந்த வருடத்தில் இருந்து குர்திஷ் அமைப்பு ஐ.எஸ் அமைப்பின் ஒரு பிரிவாக யெற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: