கொரோனா வைரஸ் தாக்குதல்: ஈரானில் – பலி எண்ணிக்கை 77 ஆக அதிகரிப்பு!

Wednesday, March 4th, 2020

ஈரான் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கி பலியானோர் எண்ணிக்கை 77 ஆக உயர்ந்துதுள்ளது. மேலும், 835 பேருக்கு கொரோனா பரவியிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் ஹுபேய் மாகாண தலைநகர் வுஹானில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அங்கு அதிக பாதிப்பு ஏற்பட்டதுடன் தொடர்ந்து உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன.

சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரசால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் பலியானோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியானவர்களின் எண்ணிக்கை மூன்றாயிரத்தை தாண்டியுள்ளது. மேலும், 90 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவை தொடர்ந்து தென்கொரியா மற்றும் ஈரானில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது

ஈரானில் இந்த நோயால் நேற்று வரை 67 பேர் உயிரிழந்தனர். வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது

ஈரான் நாட்டின் துணை சுகாதார அமைச்சர் இராஜு, துணை அதிபர் மசூமே எப்டகர் ஆகியோரும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

இந்நிலையில், ஈரானில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியானோர் எண்ணிக்கை 77 ஆக உயர்ந்துள்ளது. வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 396 ஆக உயர்ந்துள்ளது என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

Related posts: