கென்யாவில் பேருந்து விபத்து – 14 பேர் உயிரிழப்பு!
Thursday, March 28th, 2019கென்யா நாட்டில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் குழந்தைகள், பெண்கள் உட்பட 14 பேர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
கென்யா நாட்டின் வடபகுதியில் அமைந்துள்ள மண்டேரா பகுதியில் இருந்து நைரோபி நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று லாரி மீது வேகமாக மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
தகவலறிந்து பொலிசார் அங்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
Related posts:
சிரிய தாக்குதலில் 20 பேர் பலி!
பாரிஸ் கத்திக்குத்து: ஒருவர் உயிரிழப்பு - தாக்குதலுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி கண்டனம்!
கொரோனா தொற்று: இதுவரை 70 ஆயிரத்து 530 பேர் உயிரிழப்பு!
|
|