கூடாரம் சரிந்த வீழ்ந்து விபத்து: ராஜஸ்தானில் 14 பேர் பலி!

Monday, June 24th, 2019

இந்திய – ராஜஸ்தானில் கூடாரம் ஒன்று சரிந்து வீழ்ந்ததில் 14 பேர் ஸ்தலத்திலேயே பலியாகினர்.

அந்த பிரதேசத்தில் நேற்றுமுதல் பெய்த கடும் மழையுடனான காலநிலை சீர்கேடு காரணமாக இந்த கூடாரம் சரிந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுதவிர, 50க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் சிலர் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ராஜஸ்தானில் சமய நிகழ்வொன்றிற்காக பொதுமக்கள் ஒன்று கூடியிருந்த வேளையிலே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்திற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு 5 லட்சம் ரூபாவும், காயமடைந்தவர்களுக்கு 2 லட்சம் ரூபாவும் நட்டயீடாக வழங்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்திய பிரதமர் தெரிவித்துள்ளார்.

Related posts: