உலங்கு வானூர்தி விபத்து – 5 பேர் பலி!

Friday, October 6th, 2017

இந்திய விமானபடைக்கு சொந்தமான எம்.ஐ-17 உலங்கு வானூர்தியொன்று அருணாச்சல பிரதேசம் அருகே விபத்துக்குள்ளாகியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்திய விமானப்படைக்கு சொந்தமான எம்.ஐ-17 ரக விமானம் இன்று அதிகாலை 6 மணியளவில் அருணச்சல பிரதேசம் தவாங் பகுதியில் பராமரிப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த போது விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விமானத்தில் பயணித்த 6 பணியாளர்களில் 5பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழிந்ததாகவும் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் இந்திய விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விபத்து பகுதியான அருணாச்சல பிரதேசம்-சீனா எல்லை பகுதிக்கு விரைந்த மீட்பு பணியினர் படுகாய மடைந்தவரை மீட்டு அருகே உள்ள மருத்துவ மனையில் அனுமதித்துள்ளனர்.மேலும் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைப்பெற்று வருவதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன

Related posts: