வடக்கு – கிழக்கு பிறீமியர் லீக் : 50 இலட்சம் ரூபா யாருக்கு!

Friday, June 1st, 2018

வடக்கு-கிழக்கு பிறீமியர் லீக் (N.E.P.L.) நடாத்தும் மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுத் தொடரின் இரண்டாம் நாள் இரண்டு பலம் வாய்ந்த அணிகள் மோதிக்கொண்டன.

யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டியில் யாழ்.மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ரில்கோ கொன்கியூரஸ் அணியும் மன்னார் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாதோட்டம் எப்.சி அணியும் மோதிக்கொண்டன.

ஆட்டத்தின் முதற்பாதியில் ரில்கோ கொன்கியூரஸ் அணி 2:0 கோல்களை எடுத்தது. விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப் பாதி நேரத்தில் இரண்டு அணிகளும் கடும் போராட்டத்துடன்விளையாடின. எனினும் எந்தவொரு அணியாலும் கோல் போட முடியவில்லை.

அதன்படி ரில்கோ கொன்கியூரஸ் அணி 2:0 என்ற கோல் கணக்கில் வெற்றியினைச் சுவீகரித்துக்கொண்டது. ஆட்ட நாயகனாக ரில்கோ கொன்கியூரஸ் அணி சார்பில் தினேஸ்தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனிடையே உத்தியோகபூர்வமாக ஆரம்பமான NEPL குழுமத்தின் முதலாம் நாள் சுற்றுப்போட்டியில் கிளிநொச்சி மாவட்டத்தைப் பிரதி நிதித்துவப்படுத்தும் கிளியூர் கிங்ஸ் அணியும்திருகோணமலை மாவட்டத்தைப் பிரதி நிதித்துவப்படுத்தும் ரிங்கோ ரைரன்ஸ் அணியும் மோதிக்கொண்டன.

இதில் கிளியூர் கிங்ஸ் அணி 9:4 என்ற கோல் கணக்கில் ரிங்கோ ரைரன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றியினைச் சுவீகரித்தது.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (03-06-2018) மூன்றாவது நாளாக நடைபெறவுள்ள போட்டித் தொடரில் யாழ்.மாவட்டத்தைப் பிரதி நிதித்துவப்படுத்தும் நோதா்ன் எலைய்ட் ஏப்.சி மற்றும் தமிழ்யுனைட்டட் ஆகிய இரு அணிகள் மோதவுள்ளன.

வடக்கு கிழக்கு பிறீமியர் லீக் ஆட்டத்தில் முதலாம் பரிசாக 50 இலட்சம் ரூபாவும், இரண்டாம் பரிசாக 30 இலட்சம் ரூபாவும், மூன்றாம் பரிசாக 15 இலட்சம் ரூபாவும், நான்காம் பரிசாக 5 இலட்சம்ரூபாவும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related posts: