முதலாவது வெற்றியை பதிவு செய்தது பஞ்சாப்!

Monday, April 9th, 2018

இந்தியன் பிரிமியர் லீக் போட்டியின் 2 வது போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றிப்பெற்றுள்ளது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் டெல்லி டெயர்டெவில்ஸ் ஆகிய அணிகள் மோதிய போட்டி மொஹாலியில் இடம்பெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பாடிய, டெல்லி டெயர்டெவில்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 166 ஓட்டங்களை பெற்றது.துடுப்பாட்டத்தில் அணித் தலைவர் கௌதம் கம்பீர் 55 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்று கொடுத்தார்.இதனை தொடர்ந்து தமது வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடிய, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 4 விக்கட் இழப்பிற்கு 18.5 ஒவர்கள் நிறைவில் வெற்றி இலக்கை அடைந்தது.

இப்போட்டியில், பஞ்சாப் அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய லோகேஸ் ராஹுல் அதிரடியாக துடுப்பெடுத்தாடி 14 பந்துகளில் 51 ஓட்டங்களைப் பெற்று சாதனை படைத்தார்.இதற்கு முன்னர் , சுனில் நரேன் மற்றும் யூசுப் பதான் ஆகியோர் 15 பந்துகளில் 50 ஓட்டங்களை கடந்தமையே சாதனையாக இருந்தது.இந்நிலையில் , குறித்த சாதனையை 14 பந்துகளில் கடந்து லோகேஷ் ராஹுல் புதிய சாதனையை படைத்துள்ளார்.6 நான்கு ஓட்டங்கள் மற்றும் 4 ஆறு ஓட்டங்கள் அடங்களாக அவர் இந்த ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.இந்த போட்டியின் ஆட்ட நாயகனாகவும் லோகேஷ் ராஹுல் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: