கண்ணீர் விட்டு அழுத பிரபல பாகிஸ்தான் வீரர்!

Sunday, March 5th, 2017
பாகிஸ்தான் சுப்பர் லீக்கின் அரையிறுப்போட்டியில் வெற்றிபெற்ற பின்னர் பாகிஸ்தான் அணி வீரர் வஹாப் ரியாஷ் கண்ணீர் விட்டு அழுத சம்பவம் ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது.

இத்தொடரில் பேஸ்வர் சல்மி அணிக்காக விளையாடிய வஹாப் ரியாஷ் சிறப்பாக பந்துவீசி 24 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகளை கைப்பற்றினார். இந்நிலையில் போட்டி முடிந்து வீரர்கள் மைதானத்தை விட்டு வெளியேறிய போது வஹாப் ரியாஷ் கண்ணீர்விட்டு அழுதார்.

பாகிஸ்தான் சுப்பர் லீக் ஆரம்பிக்க இருந்த சில நாட்களுக்கு முன்னர் வஹாப் ரியாஷின் தந்தை இறந்துவிட்டார்.

அவர் இறப்பதற்கு முன்னர் வஹாப் ரியாஷிடம், பாகிஸ்தான் சுப்பர் லீக் இறுதிப்போட்டியில் நீ லாஹுர் மைதானத்தில், நமது மக்களுக்கு முன் விளையாடுவதை பார்க்க வேண்டும். அது என் கனவு என தெரிவித்தாக வஹாப் கூறினார்.

இந்நிலையில் போட்டியில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றிருந்தாலும், தனது தந்தை இல்லையே என்ற ஏக்கம் அவரது கண்களில் கண்ணீராக பொழிந்தது.

அதுமாத்திரமின்றி அவர் தந்தை இறந்த பிறகு ஹோட்டலில் இருந்து தொலைபேசியில் அவரின் தாயிடம் தொடர்புக்கொண்டு பேசிய போது அவரது தாய் கூறியதாவது,

நீ லாஹுரில் விளையாடுவதை பார்ப்பதற்கான வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை. எனினும் உனக்கு கிடைத்த வெற்றியை நினைத்து அவர் எங்கிருந்தாலும் சந்தோஷப்படுவார் என கூறியதாக வஹாப் தெரிவித்துள்ளார்.

Related posts: