ஓரங்கட்டப்பட்டார் நட்சத்திர பந்துவீச்சாளர் லசித் மலிங்க!

Sunday, December 17th, 2017

இந்தியாவிற்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடருக்கான இலங்கை அணியில் முக்கிய வீரரான நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான லசித் மலிங்கவுக்கு ஓய்வு வழங்கப்படுள்ளதாக அறியக்கிடைக்கும் அதேவேளை வேகப்பந்துவீச்சளர்களான சுரங்க லக்மால், இசுறு உதான, மற்றும்சகல துறை வீரர்களான டில்சான் முணவீர, சீகுக்கே பிரசண்ணா முதலானவர்களுக்கும் உத்தேச அணியினூடாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லஹிரு திரிமனே, ஜீவன் மென்டிஸ் ஆகியோருக்கும் அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

 நடந்து முடிந்த பங்களாதேஸ் பிரிமியர் லீக் தொடரில் மலிங்க விளையாடிய போது கடைசித்தருணத்தில் சொந்தக்காரணங்களுக்கான போட்டித்தொடர் நிறைவடைய முன்னரே விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

அணி விபரம்- திசார பெரேரா (தலைவர் ), உப்புல் தரங்க , தனுஷ்க குணதிலக,மத்தியூஸ் , துஷ்மந்த சமீர , சச்சித் பத்திரன , குசல் பெரேரா, தசுன்  ஷானாக,விஷ்வா பெர்னாண்டோ, அசேல  குணரத்ன, நிரோஷன் டிக்வெல்ல, சதுரங்க டி சில்வா,  அகில தனஞ்சய, நுவான் பிரதீப் , சதீர சமரவிக்கிரம

Related posts: