இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தொடர் குருநகர் பாடும்மீன் கழகம் இறுதிக்குச் சென்றது!
Tuesday, September 25th, 2018இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் நடத்தும் இரண்டாம் பிரிவு அணிகளுக்கு இடையிலான கால்பந்தாட்டத் தொடரில் குருநகர் பாடும்மீன் அணி இறுதியாட்டத்துக்குத் தகுதி பெற்றது.
அனுராதபுரம் மைதானத்தில் இடம்பெற்ற அரையிறுதியாட்டத்தில் குருநகர் பாடும்மீன் அணியை எதிர்த்து மட்டக்களப்பு யங்ஸ்ரார் விளையாட்டுக் கழக அணி மோதியது. முதல் பாதியின் நிறைவில் இரண்டு அணிகளும் தலா ஒரு கோலைப் பெற்றிருந்தன.
இரண்டாவது பாதியில் இரண்டு அணிகளும் மிகச் சிறந்த போராட்டத்தை வெளிப்படுத்தின. இரண்டாவது பாதியில் கோலெதுவும் பதிவாகவில்லை. நிர்ணயிக்கப்பட்ட நிமிடங்களின் நிறைவில் இரண்டு அணிகளும் தலா ஒரு கோலைப் பதிவு செய்ததை அடுத்து சமநிலைத் தவிர்ப்பு உதைகளில் வெற்றியைத் தீர்மானிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. சமநிலைத் தவிர்ப்பு உதைகளில் வைத்து 3:1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது குருநகர் பாடும்மீன் அணி.
Related posts:
|
|