இலங்கை ‘ஏ’ அணி வலுவான நிலையில்!
Wednesday, July 6th, 2016பாகிஸ்தான் ஏ அணிக்கு எதிராக இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் இலங்கை ஏ அணி வலுவான நிலையில் உள்ளது.
லைசஸ்டரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாக நான்கு நாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட இலங்கை ஏ அணி முதல் இன்னிங்ஸில் 79.5 ஓவர்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 299 ஓட்டங்களை பெற்றது.
மஹேல உடவத்த 64 ஓட்டங்களை பெற்றார்.
இதில் உதிரி ஓட்டங்களாக 52 ஓட்டங்கள் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் ஏ அணிக்காக ஹஸன் அலி 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தார். இந்நிலையில் இரண்டாவது நாளான நேற்று முன்தினம் தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த பாகிஸ்தான் ஏ அணி ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 271 ஓட்டங்களை பெற்றது. அணித்தலைவர் பாபர் அஸாம் 61 ஓட்டங்களை குவித்தார்.
Related posts:
யூரோ கிண்ணம்: தங்க ஷூ வை வென்றார் கிரீஸ்மன்!
ஹொட்டல் அறையில் இளம்பெண்: சிக்னார் பாகிஸ்தான் வீரர்!
தீவிரவாத குற்றச்சாட்டில் சிக்கவைத்த பிரபல கிரிக்கெட் வீரரின் சகோதரர்!
|
|