இரண்டாவது போட்டியில் இந்தியா வெற்றி!
Monday, June 26th, 2017
இந்திய மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 105 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றது
போர்ட் ஒப் ஸ்பேயினில் ( Port of Spain) இடம்பெற்ற இந்த போட்டி மழை காரணமாக 43 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட போட்டியாக இடம்பெற்றதுபோட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 43 ஓவர்களில் 5 விக்கட்டுக்களை இழந்து 310 ஓட்டங்களை பெற்றது
துடுப்பாட்டத்தில் ரஹானே (Rahane) 103 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். பதிலளித்த மேற்கிந்திய தீவுகள் அணி 43 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்து 205 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது இதன்படி, ஐந்து போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி ஒன்றுக்கு பூச்சியம் என்ற அடிப்படையில் முன்னிலை பெற்றுள்ளது.
Related posts:
இந்திய தொடருக்காக பிக் பாஷ் தொடரிலிருந்து விலகும் ஓ கீபே!
உலகக் கிண்ண கிரிக்கெற்: தகுதி சுற்று போட்டிகள் ஒத்திவைப்பு - ஐ.சி.சி.!
இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வாழ்த்து!
|
|