அனில் கும்ப்ளேக்கு நிகர் அவர் மட்டும் தான்: சேவாக் !

Friday, June 23rd, 2017

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து அனில் கும்ப்ளேவுக்கு நிகர் அவர் மட்டும் தான் என இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி துடுப்பாட்ட வீரர் விரேந்திர சேவாக் கூறியுள்ளார்.

இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லியுடனான முரண்பாடினால் கும்ப்ளே தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், பலரும் கும்ப்ளேவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சேவாக்கும் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

“நான் கும்ப்ளே பயிற்சியில் விளையாடியது இல்லை. அதனால் அவரது பயிற்சி முறை குறித்து என்னால் விமர்சிக்க முடியாது. ஆனால் ஒரு சிரேஷ்ட வீரராகவும், தலைவராகவும் அவர் தலைமையில் விளையாடியுள்ளேன். அவருக்கு நிகர் அவர் மட்டும் தான்.

பயிற்சியாளராக அவர் எட்டிய மைல்கல்லை எட்டுவது மிகவும் கடினம். இந்திய அணிக்கு பல ஆண்டுகளாக வெளிநாட்டு பயிற்சியாளர்கள் தான் உள்ளனர். அவர்களால் இந்திய வீரர்களுக்கு புரியும் அளவிற்கு பேச முடியாது.

அதுவே இந்திய பயிற்சியாளர் என்றால் அவர்களுக்கு புரியும் படி ஹிந்தியில் சொல்லிவிடலாம். மேலும் இந்திய பயிற்சியாளரால் நகைச் சுவையுடன் செயல்பட முடியும். அப்படி இருக்கும் போது ஏன் வெளிநாட்டு பயிற்சியாளர்களையே விரும்புறீர்கள்” என கூறியுள்ளார்.

Related posts: