அடுத்த தோனியாக சேவாக் கூறும் புதுமுக வீரர்: ரசிகர்கள் அதிர்ச்சி!

Tuesday, March 16th, 2021


இந்தியா, இங்கிலாந்து இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இரண்டாவது போட்டியில் முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 164/6 ரன்கள் அடித்தது. துவக்க வீரர் ஜேசன் ராய் அதிகபட்சமாக 46 (35) ரன்கள் அடித்தார்.


இலக்கைத் துரத்திக் களமிறங்கிய இந்திய அணியில் துவக்க வீரர் கே.எல்.ராகுல் 6 பந்துகளை எதிர்கொண்டு டக்-அவுட் ஆனார். இருப்பினும், மறுமுனையில் புதுமுக வீரர் இஷான் கிஷன் சிறப்பாக விளையாடி அரை சதம் கடந்தார். கோலியுடன் அதிரடியாக விளையாடியதால் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.


இப்போட்டி முடிந்தப் பிறகு ட்வீட் வெளியிட்ட இந்திய அணியின் முன்னாள் வீரர் விரேந்திர சேவாக், அடுத்த தோனி இஷான் கிஷன்தான். தோனி ஆரம்பக் காலத்தில் பயமில்லாமல் விளையாடினார். அதேபோல்தான் இஷான் கிஷனின் ஆட்டமும் இருந்தது எனத் தெரிவித்தார்.


“இஷான் கிஷன் பலமில்லாமல் பந்துகளை எதிர்கொண்டார். இதற்குமுன் ஜார்கண்டிலிருந்து ஒருவர் (தோனி) இதேமாதிரிதான் துவக்கக் காலத்தில் பலமில்லாமல் விளையாடினார்” என சேவாக் பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் ஆச்சரியத்துடன் பதிலளித்து வருகிறார்கள். கிஷன் ஒரு போட்டியில்தான் விளையாடியுள்ளார். அதற்குள் எப்படித் தீர்மானித்தீர்கள். ரிஷப் பந்தை விமர்சித்து சில நாட்களுக்கு முன்பு பேட்டிகொடுத்திங்க. இப்போ அடுத்த தோனி கிஷன்னு சொல்றிங்க. ஏதோ மர்மம் இருக்கு எனப் பலர் ரீட்விட் செய்து பதிவிட்டுள்ளார்கள்.


சில நாட்களுக்கு முன்பு பேட்டிகொடுத்த சேவாக், “விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் அடுத்த சில போட்டிகளில் அதிரடியாக விளையாடி திறமையை நிரூபிக்க வேண்டும். இல்லையென்றால் டி20 அணியிலிருந்து நீக்கப்படவும் அதிக வாய்ப்பிருக்கிறது” எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்தியா, இங்கிலாந்து இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-1 என இரு அணிகளும் சமநிலையில் உள்ளன. நாளை மூன்றாவது டி20 போட்டி நடைபெறவுள்ளது. இத்தொடர் நடந்து முடிந்ததும் மார்ச் 23ஆம் தேதி முதல் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் துவங்கி நடைபெறும்.

Related posts: