நிலவில் வேற்று கிரகவாசிகள் ஆக்கிரமிப்பு?

Wednesday, May 25th, 2016

நிலவின் குறிப்பிட்ட ஒரு பகுதியில் மர்ம கோபுரங்கள் அமைந்துள்ளது போன்ற காட்சிகள் வெளியானதை அடுத்து வேற்று கிரவாசிகளின் ஆக்கிரமிப்பா என சர்ச்சை எழுந்துள்ளது.

வேற்று கிரவாசிகள் குறித்து தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வரும் குழு ஒன்று நிலவின் விளிம்பு பகுதியை ஆராய்ந்து வந்துள்ளது.

அப்போது அங்கு 200 அடி உயரம் கொண்ட 5 கோபுரங்கள் இருப்பதை அதிர்ச்சியுடன் ஆராய்ந்துள்ளனர். இதுகுறித்து பேசிய அந்த குழுவினர், இதுவரை எவரும் நிலவில் இதுபோன்ற கோபுரங்கள் அமைத்து பயன்படுத்தி வருவதை நீங்கள் நம்பவில்லை என்றால், உங்களுக்கு போதிய தகவல்களை எவரும் இதுவரை அளிக்கவில்லை என்றே கருதப்படும் என்றனர்.

இதற்கு முன்னர் நாசா அமைப்பு வெளியிட்ட புகைப்படங்களை விடவும் இந்த காட்சிகள் தெளிவற்றவையாக இருப்பினும் கோபுரங்கள் இருப்பது தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

இதுவரையான ஆராய்ச்சி முடிவுகளில், விண்வெளி ஆய்வு மையம், விண்வெளி மற்றும் வானியல் நிபுணர்கள் என பெரும்பாலானோர் அங்கிருக்கும் வட்ட வடிவமான அல்லது செவ்வகத்தை ஒத்த வடிவம் கொண்ட பாறைகள், வேற்று கிரகவாசிகளின் இருப்பிடமாக நிலா இருப்பதை உறுதி செய்துள்ளனர்.

மேலும், இதுபோன்ற தகவல்களை வெளிவராமல் தடுப்பதில் சர்வதேச சமூகத்தின் தலையீடு இருப்பதாகவும் இந்த குழுவினர் குற்றம்சாட்டுகின்றனர். காரணம் இதுபோன்ற 200 அடி உயரம் கொண்ட கோபுரங்களை திடீரென்று எழுப்புவது அத்துணை எளிதல்ல என வாதிடுகின்றனர்

Related posts: