மேலும் நான்கு புதிய ஜனாதிபதி வேட்பாளர்கள் கட்டுப்பணங்களை செலுத்தினர்!
Tuesday, October 1st, 2019ஜனாதிபதி தேர்தலுக்காக அங்கீகரிக்கப்பட்ட கட்சி மற்றும் சுயாதீன குழுக்களை அங்கத்துவப்படுத்தும் 4 வேட்பாளர்கள் நேற்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
தேர்தல்கள் ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய இதுவரை அங்கீகரிக்கப்பட்ட 9 அரசியல் கட்சிகளும் 4 சுயாதீன குழுக்களும் தங்களது வேட்பாளர் சார்பில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வேட்பாளர்கள் காட்சிப்படுத்தியுள்ள சுவரொட்டிகள் மற்றும் பதாதைகள் என்பவற்றை அகற்றுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு கட்சிகளின் செயலாளர்களை அறிவுறுத்தியுள்ளது.’
இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான காலம், இந்த மாதம் 4ம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது
Related posts:
யாழ் நீதிமன்றில் பணம் திருடியவர் கைது!
உலக சனத்தொகையில் பத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்படும் வாய்ப்பு - உலக சுகாதார அமைப்பு கவலை!
மார்ச்சில் தேங்காய் விலை குறையும் - தென்னை ஆராய்ச்சி நிலையம் தெரிவிப்பு!
|
|