பரவும் நோய் தொடர்பில் சுகாதார பிரிவின் முக்கிய அறிவிப்பு!

Friday, January 10th, 2020


தற்போது பரவிவரும் காய்ச்சல், இருமல், தடிமன் என்பன சாதாரண நோய் அறிகுறி எனவும் புதிய வைரசால் ஏற்பட்ட அடையாளம் தெரியாத நோய் அல்லவெனவும் சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்ப்ளுவென்சா நோய் பரவியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகும் தகவல் சுகாதார அமைச்சினால் வெளயிடப்பட்ட ஒன்று அல்லவென்றும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு வருடமும் பருவப்பெயர்ச்சி மழையுடன் இன்ப்ளுவென்சா நோயின் தாக்கம் அதிகரித்து காணப்படும்.

எனினும் கடந்த வருடம் நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் டிசம்பர் மாதம் குறைந்தளவிலான நோயாளர்களே பதிவாகியிருந்ததாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts:


கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுபோக செய்கையில் வரலாறு காணாத சாதனை - மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் இ...
மக்கள் பிரச்சனைகள் தொடர்பில் வெளிப்படைத் தன்மையுடன் விவாதிக்கப்படும் - வடக்கின் ஆளுநர் ஜீவன் தியாகர...
வெளிநாட்டில் தொழில் புரியம் இலங்கையர்களால் இலங்கைக்கு கிடைக்கும் டொலர்களின் தொகை அதிகரிப்பு!