ஸ்ரீலங்கா பொதுஜன கூட்டமைப்பின் கட்சி தலைவர்கள் கூட்டம் பிரதமரின் தலைமையில் இடம்பெற்றது!
Monday, April 19th, 2021ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கூட்டமைப்பின் கட்சி தலைவர்கள் கூட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்றையதினம் (19) அலரி மாளிகையில் இடம்பெற்றது.
இதன்போது மே மாதம் முதலாம் திகதி நடைபெறவுள்ள தொழிலாளர் தினம்’ தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
கொரோனா தொற்று காரணமாக மேதின ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்காது சுகாதார வழிகாட்டல்களுக்கமைய மேதின பேரணிகளை மாத்திரம் நடத்துவது தொடர்பில் இதன்போது கட்சி தலைவர்களின் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.
குறித்த கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ, அமைச்சர்களான ஜீ.எல்.பீரிஸ், தினேஷ் குணவர்தன உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பின் கட்சி தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்
Related posts:
2017 ஆம் ஆண்டு முதல் ஜீ.எம்.பி. சான்றிதழ் அவசியம்!
அவசரகால பயன்பாட்டுக்கு கோவிஷீல்டுக்கு அனுமதி - இலங்கையின் முடிவிற்கு இந்தியா பாராட்டு!
மிலேனியம் சவால்கள் ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கம் கைச்சாத்திடாது - சட்டமா அதிபர், உயர் நீதிமன்றத்திற...
|
|