வாள்வெட்டுக் கும்பல் கோப்பாயில் அடாவடி – 8பேர் படுகாயம் !

Monday, February 20th, 2017

கோப்பாய் பகுதியில் நேற்று மாலை வாள்கள், பொல்லுகளுடன் 5மோட்டர் சைக்கிள்களில் வந்த 9பேர் கொண்ட கும்பல் கள்ளுத்தவறணைக்கு முன்னால் நின்றவர்கள் மீது மேற்கொண்ட சரமாரியான தாக்குதலில் 8பேர் படுகாயமடைந்துள்ளனர்.

3வாகனங்களும் கும்பலால் அடித்து சேதமாக்கப்பட்ட. என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. என்று யாழ்.மாவட்டப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார். எனினும் நேற்று வாள்வெட்டுக் கும்பலின் அடாவடி இடம்பெற்றுள்ளமை குறித்து மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

கோப்பாய் இராச வீதியும், கைதடி-மானிப்பாய் வீதியும் சந்திக்கும் பகுதியில் அமைந்துள்ள கள்ளுத்தவறணை முன்பாக நேற்றுக் காலையில் மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது இதன்போது ஒருவர் தாக்கப்பட்டுள்ளார். இவ்வாறனதொரு நிலையில் நேற்றுமாலை இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. காலையில் நடைபெற்ற மோதல் சம்பவத்திற்கும் மாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்திற்கும் தொடர்பு உள்ளதாக நம்பப்படுகின்றது. அது தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுகின்றன. மோட்டார் சைக்கிள்களில் நேற்று மாலை அந்தப் பகுதிக்கு வந்த கும்பல்கள் கள்ளுத்தவறணையின் முன்பாக நின்றவர்கள். அந்தப் பகுதியில் நடமாடியவர்கள் 7பேர் மீது தாக்குதல் மேற்கொண்டது. இதில் இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இவ்வாறு தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் நின்ற 3 வாகனங்கள் அடித்த நொறுக்கப்பட்டன. இவ்வாறு அசம்பாவிதம் இடம்பெற்ற பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் மீதும் கும்பல் தாக்குதல் நடத்த முயற்சிக்கின்றது.

சம்பவத்தில் காயமடைந்த மூவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர் எமக்கும் மற்றும் சிறப்பு அதிரடிப் படையினருக்கும் தகவல் வழங்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன என்று பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Untitled-1 copy

Related posts: