வடக்கில் நிலை மோசம் – ஒரேநாளில் 80 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு!

Friday, March 26th, 2021

வடக்கு மாகாணத்தில் மேலும் 80 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அவர்களில் 66 பேர் யாழ்ப்பாணம் மாநகர மத்தி நவீன சந்தைப் பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடம் ஆய்வுகூடங்களில் 677 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதன்படி, யாழ்ப்பாணம் மாநகர பொதுச் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 77 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர்களில் 11 பேர் ஏற்கனவே தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள் என்பதுடன் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவர்களாவர்.

இதேவேளை, யாழ்ப்பாணம் மாநகரில் நவீன சந்தை உள்ளிட்ட கடைத் தொகுதிகளில் பணியாற்றும் 66 பேருக்குத் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனைவிட, தெல்லிப்பளை வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும் சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவருக்கும் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை, முல்லைத்தீவு பொது வைத்தியசாலையில் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் கொரோனா அறிகுறிகளுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டவர் என்றும் மருத்துவர் கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: