யாழ்.மாவட்டத்தில் பதிவான கடும் மழையுடனான காலநிலை!

Sunday, October 31st, 2021

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மழையுடன் கூடிய காலநிலையினால் கடந்த 48 மணி நேரத்திற்குள் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 10 குடும்பங்களைச் சேர்ந்த 45 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,ஒரு வீடு முற்றுமுழுதாக சேதமடைந்துள்ளதாகவும் யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் சூரியராஜ் தெரிவித்துள்ளார்.

சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஜே 141, 142 ஆகிய கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளே மழையுடன் கூடிய காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ளது.

இதன்போது பாதிக்கப்பட்டோரின் விபரங்கள் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தின் ஊடாக பெற்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எனினும் குறித்த காலநிலையானது மறு அறிவித்தல் வரை தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்

000

Related posts: