முதற்கட்டமாக 4800 பட்டதாரிகளுக்கு நியமனம்!
Wednesday, June 27th, 2018
பட்டதாரிகளை அரச சேவையில் உள்வாங்குவதற்கான வேலைத்திட்டடத்தின் கீழ் முதற்கட்டமாக 4 ஆயிரத்து 800 பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.
அரச சேவையில் இணைத்துக்கொள்வதற்காக பட்டதாரிகளுக்கு நடத்தபட்ட நேர்முகத் தேர்வுகளில் 25 புள்ளிகளுக்கு அதிகமாக பெற்றுக்கொண்டவர்களை முதற்கட்டமாக இணைத்துக்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பட்டதாரிகளை இணைத்துக் கொள்ளும் வேலைத்திட்டத்துக்கு 66 ஆயிரம் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன என்றும் அதில் 4 ஆயிரத்து 800 பேர் மாத்திரமே நேர்முகத் தேர்வுகளில் 25 புள்ளிகளுக்கு மேல் பெற்றுக்கொண்டுள்ளனர் என்றும் அமைச்சரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
இன்று இரவு 8 மணிமுதல் 5 நாட்களுக்கு தொடர்ந்து முடக்கப்படுகின்றது இலங்கை – உத்தரவுகளை மீறினால் கடுமைய...
43 வருடங்களின் பின்னர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தம் - உத்தேச சட்டமூலத்தினை வர்த்தமானியாக வ...
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் உயர்வு!
|
|